பிளாஸ்மா தானம் ஏன் செய்ய வில்லை! மனம் திறந்த இயக்குனர் ராஜமௌலி!

Published:

rajamauli
rajamauli

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுளி கொரோனாவின் தாக்குதலுக்கு உட்பட்ட போது அதிலிருந்து தேறி வெளி வந்ததும் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று அறிவித்தார்.

செவ்வாயன்று அவருடைய சகோதரர் எம்எம் கீரவாணி குடும்பம் பிளாஸ்மா தானம் செய்துள்ளது. ஆனால் ராஜமௌளி மட்டும் ப்ளாஸ்மா தானம் செய்யவில்லை.

பிரமுக இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி செவ்வாயன்று பிளாஸ்மா தானம் செய்தார். தன் பெரிய மகன் காலபைரவோடு சேர்ந்து ஹைதராபாதில் கிம்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்தார்.

அண்மையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட கீரவாணி குடும்பம் அதன்பின் உடல்நலம் தேறி வெளிவந்தது. பிளாஸ்மா தானம் குறித்த புரிதல் ஏற்படுத்துவதற்காக சைபராபாத் போலீசாரோடு சேர்ந்து அதற்கென்று ஒரு பாடலை இசை அமைத்த கீரவாணி இப்போது தன் மகனோடு சேர்ந்து ப்ளாஸ்மா தானம் செய்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

அப்படி இருக்கையில் எம்எம் கீரவாணி குடும்பத்தோடு கூட அவருடைய சகோதரர் பிரமுக திரைப்பட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌளி கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானார். உண்மையில் கீரவாணி குடும்பத்தை விட முன்பே ராஜமௌலி இந்த விஷயம் குறித்து வெளி உலகத்திற்கு தெரிவித்தார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

விரைவிலேயே நான் உடல்நலம் தேறிய பின் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று அறிவித்தார். நோய்த் தொற்றிலிருந்து உடல் நலம் தேறிய பின்பு கூட மருத்துவரின் அறிவுரைப்படி ப்ளாஸ்மா தானம் செய்வேன் என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் இப்போது தானம் செய்யும் நிலையில் இல்லை. அதன் காரணத்தைக் கூட அவரே தெரிவித்தார்.

பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்றால் தானம் கொடுப்பவரின் ரத்தத்தில் இம்முநோகுளோபுலின் (igG) ஆன்டிபாடீஸ் 15 பாயிண்ட்களை விட அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது ராஜ்மௌளி இரத்தத்தில் ஐஜிஜி லெவெல் 8 புள்ளி 62 ஆக உள்ளது. அதனால்தான் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை என்று ராஜமவுலி மருத்துவர் மூலம் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

தன் பெரிய அண்ணா கீரவாணியும் காலபைரவாவும் செவ்வாயன்று பிளாஸ்மா தானம் செய்தனர் என்று அவர் கூறினார். உடலில் வளர்ச்சி அடையும் ஆன்டிபாடிஸ் சிறிது காலம் உடலில் இருக்கும் என்று ராஜமௌலி சென்னார்.

கொரோனாவிலிலிருந்து உடல்நலம் தேறி வரும் ஒவ்வொருவரும் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன்வர வேண்டுமென்றும் உயிர் தானம் செய்பவர்கள் அதிகம் தேவை என்றும் ராஜமௌலி வேண்டுகோள் விடுத்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img