தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

புது தில்லி:

தமிழகம், அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.,30 இன்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேகாலயா ஆளுநராக இருந்து வரும் இவர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் 1940, ஏப்ரல் 16 ஆம் தேதி பிறந்தவர் பன்வாரி லால் புரோஹித். இவர் முன்னதாக அசாம் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். நாக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றிய இவர் பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். 1991இல் பாஜக.,வில் இணைந்தார்.

1977ல் தீவிர அரசியலுக்கு வந்தவர். 1978ல் நாக்புர் கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று சட்ட சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1980ல் மீண்டும் நாக்புர் தெற்கு தொகுதியில் இருந்து தேர்வாகி, அமைச்சர் ஆனவர்.

1984,1989ல் நாக்புர் எம்.பி.யாகவும், பாதுகாப்பு அமைச்சக நாடாளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். 1996ல் மீண்டும் மக்களவைக்கு தேர்வானவர்.

மகாத்மா காந்தியின் குரு, கோபால கிருஷ்ண கோகலேயால் நிறுவப்பட்ட ‘தி ஹிதவாதா’ நாளிதழை திறம்பட நடத்தியவர். இவரது தலைமையின் கீழ், தி ஹிந்துத்வா நாளிதழ், மத்திய இந்தியாவில் பெரும் புகழ் பெற்றது. நாக்புரில் இருந்த தலைமை அலுவலக பதிப்புடன், ஜபல்புர், ராய்புர், போபால் ஆகிய இடங்களில் பதிப்புகளைக் கொண்டு வந்தவர் பன்வாரிலால் புரோஹித்.

அந்தமான், நிகோபர் தீவுகளுக்கு புதிய துணை நிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். பன்வாரிலால் புரோஹித்க்கு பதிலாக மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அசாம் மாநில ஆள்ளுநராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச ஆளுநராக பி.டி.மிஸ்ரா, பீஹார் மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories