தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

telugu-actor-baidi
telugu-actor-baidi

பைடி ஜைராஜ்
(Paidi Jairaj – செப். 28, 1909 -ஆகஸ்ட் 11, 2000)

தாதாசாகெப் பால்கே அவார்டு பெற்ற தெலங்காணாவின் செல்லப்பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள். இன்று. பைடி ஜைராஜ் நீண்ட திரையுலக வாழ்க்கை கொண்டவர்.

இந்திய திரைத் துறையில் தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

இவர் 156 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 300க்கும் மேல் ஊமைப் படங்களிலும், பேசும் (டாக்கி) படங்களிலும் நடித்துள்ளார். கவிக்குயில் சரோஜினி நாயுடு ஜைராஜுக்கு சித்தி முறை.

சிர்சிலா மாவட்டத்தைச் சேர்ந்த ஜைராஜ் ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் படித்து வந்த போது சினிமா ஆசையால் 1929ல் பாம்பாய் சென்றார். தன் இருபதாவது வயதில் 1930 ல் முதன்முதலாக ஸ்பார்க்ளிங் யூத் என்ற ஊமைப் படத்தில் நடித்தார். 1931 ல் தொடங்கிய பேசும் டாக்கி யுகத்தில் ஷிகாரி என்ற உருது திரைப்படத்தில் நுழைந்தார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

அதன்பின் சாந்தாராம், பிரித்விராஜ் கபூர், போன்ற பெரிய ஹீரோக்களோடு மற்றும் ஒரு பெரிய ஹீரோவாக பெயர் வாங்கினார்.

நிருபமாராய், சசிகலா, தேவிகா ராணி, மீனா குமாரி போன்ற ஹீரோயின்களோடு நடித்தார். பல வெற்றிப் படங்களைக் கண்டார்.

ஹிந்தி, உருது மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்த தெலுங்கரான பைடி ஜைராஜ் அதிகமாக ஷாஜகான், பிரிதிவிராஜ் சவுகான், ராணா பிரதாப் சிங், திப்பு சுல்தான், அலாவுதீன், சந்திரசேகர ஆசாத் போன்ற வரலாற்று பாத்திரங்களை ஏற்று நடித்தார். ஆனால் இவர் ஒரு தெலுங்கு படத்தில் கூட நடிக்கவில்லை.

மெஹர், மாலா, பிரதிமா, ராஜ்கர் என்ற நான்கு படங்களை இயக்கியுள்ளார். 1951 ல் நர்கீஸ் கதாநாயகியாக நடித்த சாகர் படத்தை தயாரித்தார்.

இவருக்கு வாழ்நாள் சாதனையாளராக தாதா சாகிப் பால்கே விருதினை 1980 ல் இந்திய அரசு அளித்து கௌரவித்தது. இவர் மனைவி பஞ்சாபியான சாவித்திரி. இவருக்கு இரு புதல்வர்களும் நான்கு புதல்விகளும் உள்ளனர்.

பைடி ஜைராஜ் ஆகஸ்ட் 11, 2000 ல் தன் 90வது வயதில் காலமானார். 2018 ல் தெலங்காணா அரசு ஜைராஜின் நீண்ட திரைப்பட வாழ்க்கையை கௌரவிக்கும் விதமாக ஒரு மணி நேர டாக்குமெண்ட்ரி படம் எடுத்து வெளியிட்டது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

கட்டுரை- ராஜி ரகுநாதன்,
ஹைதராபாத்-62.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories