நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர்! பிறகு என்ன நடந்தது?! வீடியோ வைரல்!

Published:

palm-tree
palm-tree

யாராவது தான் அமர்ந்த மரத்தை தானே வெட்டுவார்களா? வைரல் வீடியோ.

யாராவது தனக்குத்தானே அபாயம் விளையும் படியாக உட்கார்ந்திருக்கும் மரத்தை வெட்டும் முட்டாள்கள் இருப்பார்களா?

இன்டர்நெட்டில் வைரலாக சுற்றும் ஒரு வீடியோ கூட இந்த கூற்றினையே நிரூபித்து வருகிறது.

இதிலுள்ள மனிதர் கீழே விழாமல் மரத்தின் மேல் பகுதியை பிடித்துக்கொண்டு ஊஞ்சல் ஆடுகிறார். அவர் மரத்தின் மேல் ஏறி மரத்தின் தலையை வெட்டிய முறை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அச்சத்தையும் விளைவிக்கிறது.

அமெரிக்காவின் முன்னாள் புட்பால் வீரர் ரிக்ஸ் சாப்மேன் இந்த வீடியோவை ஷேர் செய்து உயரமான பனைமரத்தை ரம்பத்தை கொண்டு அறுப்பதை எப்போதாவது யாராவது பார்த்தீர்களா என்று விமர்சனம் செய்துள்ளார் .

அதில் ஒரு மனிதர் மிக மிக உயரமாக உள்ள ஒரு பனை மரத்தின் மீது ஏறி அதன் தலைப்பாகத்தை ரம்பத்தால் அறுத்து வெட்டுவது தெரிகிறது. அவர் அதன் நுனியில் அமர்ந்து இருப்பதால் அந்த மரம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடுகிறது. இலைகளோடு கனமாக இருந்த தலைப்பகுதி வெட்டப் பெட்டுவிட்டதால் வெறும் மொட்டை மரம் வேகமாக பின்னாலும் முன்னாலுமாக ஆடியதால் அவர் எங்கே கீழே விழுந்து விடுவாரோ என்று நமக்கு அச்சம் ஏற்படுகிறது. ஆனால் அவர் பாதுகாப்பாகவே அதன் மீது அமர்ந்து இருந்தார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

அனைவரையும் ஆச்சரியத்துக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கிய அந்த வீடியோவை நெட்டிசன்கள் மிக அதிகம் லைக் செய்து விமர்சனம் செய்துள்ளார்கள்.

யாராவது இந்த மனிதர் மரத்தின் மீது இருந்து பறந்து விடுவார் என்று நினைத்தால் அவர்கள் கையை த் தூக்குங்கள் என்று ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

மரத்தின் அடிப்பாகத்தை வெட்டலாம் அல்லவா என்று சிலர் கேட்க அத்தனை உயரமான மரத்தை வெட்டினால் ஒரேடியாக கீழே விழுந்து மின்சார ஒயர்கள், வீடுகள் அடிபடும் என்று மேலும் சிலர் விளக்கம் அளித்துள்ளார்கள். ஓ மை காட்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img