பிஜேபி தலைவர் புரந்தரேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி. ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
ஜுரம் இருமல் அதிகமாக இருந்ததால் அவர் தற்போது ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் கூட பரிசோதனை செய்து கொண்டுள்ளார்கள்.
பிஜேபி தலைவர் தக்குபாட்டி புரந்தரேஸ்வரிக்கு கொரோனா தோற்று பரவியுள்ளது. கொரோனா நோய் அடையாளங்களால் அவதிப்பட்டு வரும் பரந்தரேஸ்வரி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிஜேபி தேசிய பொதுச் செயலாளராக டெல்லி தலைமை அவர் பெயரை அறிவித்தது. அதோடுகூட பெரிய அளவில் தலைவர்களும் உறுப்பினர்களும் புரந்தரேஸ்வரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கொரோனா சோதனை செய்து கொண்டார். அதில் பாசிடிவ் என்று முடிவு வெளிவந்தது.
ஆயின் அவர் ஹோம் குவாரன்டைனில் வீட்டிலிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று எண்ணினார். ஆனால் ஜுரமும் இருமலும் அதிகமாக இருந்ததால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சேர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மற்றும் அவரோடு கூட காண்டாக்ட் ஆனவர்களும் தற்போது கொரோனா சோதனை செய்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ரிசல்ட் இன்னும் வர வேண்டி உள்ளது.
மறுபுறம் இந்த விவரம் தெரிந்த உடனே நந்தமூரி ஃபேமிலி கவலை அடைந்துள்ளது.



