சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.
பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு ஐநாசபை அவார்டு கிடைத்துள்ளது. ஐநா சபையின் துணை அமைப்பான சஸ்டைனபுள் டெவலப்மென்ட் கோல்ஸ் எஸ்டிஜி ஸ்பெஷல் ஹ்யூமானிடேரியன் விருது அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் லாக்டௌன் நேரத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்ததற்காக இந்த சிறப்பான கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
இந்த அவார்டை அவருக்கு ஒரு வர்ச்சுவல் நிகழ்ச்சி மூலம் திங்களன்று மாலை அளித்தார்கள்.
இதன்மூலம் ஐநா சபையின் அவார்டு பெற்றுக்கொண்ட ஏஞ்சலினா ஜூலி, டேவிட் பெக்ஹாம், லியோனார்டோ டி காப்ரியோ, பிரியங்கா சோப்ரா மற்றும் பல திரைப்பட பிரமுகர்கள் வரிசையில் சோனூசூட்டும் சேர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பேசுகையில் இது ஒரு அரிதான கௌரவம். ஐநா சபையின் அவார்டு பெறுவது என்பது மிகவும் பிரத்தியேகமானது. நம் நாட்டு மக்களுக்கு நான் செய்யக் கூடிய மிகச் சிறிய உதவியை எனக்கு முடிந்த அளவில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்தேன். ஆனால் என் உதவிச் செயல்களை அடையாளம் கண்டு விருது கொடுப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. யுஎன்டிபி தன் நிலையான முன்னேற்ற இலக்குகளை (எஸ்டிஜி) சேர்வதற்கு நான் முழுமையாக உதவுவேன். இந்த அமைப்பின் செயல்கள் மூலம் மானுட ஜாதிக்கும் சுற்றுச்சூழலுக்கும் அதிக அளவு நன்மை கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.



