இன்று நடைபெறுகிறது இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை

புது தில்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது குறித்து, இந்திய – சீன நாட்டு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தில்லியில் இன்று நடக்கிறது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு நடப்பதால் இதில் சுமூக தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அருகில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீன ராணுவம் 1962ல் இருந்து ஆக்கிரமித்துள்ளது. அக்சாய் சின் வழியாக சீனாவின் சின்சியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையிலான சாலையையும் சீன அரசு அமைத்துள்ளது. மேலும் இந்த வழித்தடத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீர் எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். மேலும் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்குள்ளும் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவுவதும் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது திடீரென திரும்பப் பெறப் படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றபோது, அதற்கே சீன அரசு கண்டனம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும் சீனாவின் அக்கிரமிப்பு இருந்து வருகிறது. நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு பிரதிநிதிகளும் இதுவரை 17 முறை பேச்சு நடத்தியுள்ளனர். ஆனாலும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது இப்பிரச்னையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டால் எல்லைப் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தில்லியில் நடைபெறும்ம் இன்றைய பேச்சுவார்த்தையில் சீன அரசின் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி கலந்து கொள்கிறார். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories