இன்று நடைபெறுகிறது இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை

புது தில்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது குறித்து, இந்திய – சீன நாட்டு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தில்லியில் இன்று நடக்கிறது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு நடப்பதால் இதில் சுமூக தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அருகில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீன ராணுவம் 1962ல் இருந்து ஆக்கிரமித்துள்ளது. அக்சாய் சின் வழியாக சீனாவின் சின்சியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையிலான சாலையையும் சீன அரசு அமைத்துள்ளது. மேலும் இந்த வழித்தடத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீர் எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். மேலும் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்குள்ளும் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவுவதும் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது திடீரென திரும்பப் பெறப் படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றபோது, அதற்கே சீன அரசு கண்டனம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும் சீனாவின் அக்கிரமிப்பு இருந்து வருகிறது. நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு பிரதிநிதிகளும் இதுவரை 17 முறை பேச்சு நடத்தியுள்ளனர். ஆனாலும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது இப்பிரச்னையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டால் எல்லைப் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தில்லியில் நடைபெறும்ம் இன்றைய பேச்சுவார்த்தையில் சீன அரசின் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி கலந்து கொள்கிறார். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories