புது தில்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது குறித்து, இந்திய – சீன நாட்டு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தில்லியில் இன்று நடக்கிறது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு நடப்பதால் இதில் சுமூக தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அருகில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீன ராணுவம் 1962ல் இருந்து ஆக்கிரமித்துள்ளது. அக்சாய் சின் வழியாக சீனாவின் சின்சியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையிலான சாலையையும் சீன அரசு அமைத்துள்ளது. மேலும் இந்த வழித்தடத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீர் எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். மேலும் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்குள்ளும் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவுவதும் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது திடீரென திரும்பப் பெறப் படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றபோது, அதற்கே சீன அரசு கண்டனம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும் சீனாவின் அக்கிரமிப்பு இருந்து வருகிறது. நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு பிரதிநிதிகளும் இதுவரை 17 முறை பேச்சு நடத்தியுள்ளனர். ஆனாலும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது இப்பிரச்னையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டால் எல்லைப் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தில்லியில் நடைபெறும்ம் இன்றைய பேச்சுவார்த்தையில் சீன அரசின் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி கலந்து கொள்கிறார். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
இன்று நடைபெறுகிறது இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

