விவசாயிகள் கூட்டமைப்பு பந்த் தேதியை மாற்றுமாறு இந்து முன்னணி கோரிக்கை

Published:

rama-gopalan சென்னை: காவிரியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் செயலைக் கண்டித்தும், நதி நீர் குறித்து தீர்க்கப்படாம்ல் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தவிருக்கும் பந்த் தேதியை மாற்ற வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அதன் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில், காவிரி நதியின் மீது புதிய அணைக் கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகளின் கூட்டமைப்பு 28ஆம் தேதி தமிழக பந்த் அறிவித்திருக்கிறது. அன்று ராம நவமி வருவதால், அந்தத் தேதியை மாற்றி 29ஆம் தேதிக்கு மாற்றி அமைத்திட இந்து முன்னணிக் கேட்டுக்கொள்கிறது. அனைவரும் இதில் கலந்துகொள்ள இது ஏதுவாக இருக்கும். தமிழக விவசாய உற்பத்தியில் காவிரி நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. காவிரியில் நமது உரிமையை நிலைநிறுத்த நடைபெறும் இந்த கடையடைப்பை வரவேற்கிறோம். மாநில மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திட கடையடைப்பு நடத்தும் போது எல்லோருடைய ஆதரவைப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த தேதியை மாற்றி அமைத்திட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. ராம நவமியை தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடுப்படுகிறது. இவை தவிர விசேஷமான கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வருவதும், விரதம் இருப்பதும் இந்த நாளின் சிறப்பானதாகும். இந்நிலையில் ராமநவமி அன்று கடையடைப்பும் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும்போது பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாவர்கள். எனவே, இது குறித்து விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் புரிந்துகொண்டு, தேதியை மாற்றி அறிவிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img