விபத்தில் போராடிய இளைஞர்: ஆபத்தில் உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை அந்த வழியே சென்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து உயிரைக் காத்தார். இந்த நிகழ்ச்சி அங்குள்ளவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். நேற்று ஞாயிறு மாலை 4 மணி அளவில் இலுப்பூர் பேராலயத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் மீண்டும் அவர் முதல்வராக வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக காரில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூரை அடுத்த மேட்டுச்சாலை என்ற இடத்தில் சாலையோரம் அரசு பஸ்சில் அடிபட்ட இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட டாக்டர் விஜயபாஸ்கர் தனது காரில் இருந்த முதலுதவிப் பெட்டியின் முலம் அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் உடன்வந்த பாதுகாப்பு வாகனத்தில் அந்த நபரை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கே இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு போராடிய அவரை சாவின் விளிம்பில் இருந்து மருத்துவர்கள் காப்பாற்றினர். நிகழ்ச்சி முடிந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற டாக்டர் விஜயபாஸ்கர் அந்த இளைஞர் குறித்து விசாரித்தார். அந்த இளைஞர் காரையூர் அருகே உள்ள நெறிஞ்சிக்குடியை சேர்ந்த அடைக்கலம் மகன் குமரேசன் என்று தெரிந்தது. அவரின் குடும்பத்தாருக்கு மருத்துவச் செலவுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை வழங்கி சிகிச்சை பெற்று வரும் குமரேசனுக்கு ஆறுதல் கூறினார். மகனின் உயிரைக் காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கரை அங்குள்ளோர் நெகிழ்ச்சியுடன் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories