ஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’!

tarlupadu-veerabarda-swami-temple
tarlupadu-veerabarda-swami-temple

ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டம் தர்லுபாடு கிராமத்தில் உள்ள புராதனமான ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய கலசத்தை சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மனிதர்கள் சிதைத்துள்ளார்கள்.

இதுகுறித்து ஞாயிறன்று எஸ்பி சித்தார்த்த கௌசல் மற்றும் சிஐகள் வி ஶ்ரீராம், கேவீ ராகவேந்திரா சம்பவ இடத்தை சென்று சோதனை இட்டனர். புதையலுக்காக கோபுரக் கலசத்தை நீக்கிவிட்டு தேடி உள்ளதாக எஸ்பி சித்தார்த் தகவல் வெளியிட்டார்.

ஆலயத்தின் கோபுரம் மேல் உள்ள கலசத்திற்கு மஞ்சள் குங்குமம் தடவி பூஜை செய்துவிட்டு அதை சுற்றி உள்ள கான்க்ரீட்டை நீக்கி இருக்கிறார்கள்.

புராதனமான வீரபத்திர சுவாமி ஆலயத்தில் கலசத்தை ஸ்தாபித்த போது அதில் ஏதாவது மதிப்பு மிகுந்த பொருட்கள் இருக்கும் வாய்ப்பு இருந்தால் அதை திருடி கொள்ளலாம் என்ற உத்தேசத்தோடு திருடர்கள் அந்த வேலையை செய்து உள்ளார்கள் என்று போலீஸார் சந்தேகத்தை வெளியிட்டார்கள்.

உள்ளூர் பிஜேபி தலைவர்கள் ஞாயிறு அன்று இரவு ஆலயம் அருகில் வந்து சற்று நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

tarlupadu-veerabarda-swami-temple-protest
tarlupadu-veerabarda-swami-temple-protest

மறைத்து வைத்த புதையல் இருக்கும் என்ற எண்ணத்தில் பிரகாசம் மாவட்டத்தில் கோவிலின் கோபுர கலசத்தை சிதைத்திருப்பார்கள் என்பது போலீசாரின் சந்தேகம்.

பல நூற்றாண்டு கால வரலாறு படைத்த வீரபத்திர சுவாமி ஆலய கலசத்திற்கு பூஜைகள் செய்துவிட்டு திருட்டு நடத்தியுள்ளது புதையலுக்காகவே என்று மாவட்ட எஸ்பி சித்தார்த் கௌசல் தகவல் தெரிவித்தார்.

தர்லுபாடு கிராமத்தில் உள்ள இந்த கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் உற்சவங்களுக்கு கர்னூல், குண்டூர் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பெரிய அளவில் பக்தர்கள் வந்து சேர்வார்கள்.

tarlupadu-veerabarda-swami-temple1
tarlupadu-veerabarda-swami-temple1

ஆலய கலசத்தை சிதைத்தார்கள் என்ற விஷயம் அறிந்த உள்ளூர் பிஜேபி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதம் வந்த பின்பே நிலைமை சீரானது. திருடர்களை பிடிக்க தனி குழு அமைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அண்மையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது வருத்தத்துக்குரியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories