கேஸ் சிலிண்டர் பெற… புதிய நடைமுறை! மொபைல் போன் இன்றி கழியாது வாழ்க்கை!

Published:

GAS CELINDAR
GAS CELINDAR

கேஸ் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு எச்சரிக்கை… நவம்பர் 1 முதல் புது சட்டங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் உங்களுக்கு இனி நோ சிலிண்டர். ..

எல்பிஜி கேஸ் சிலிண்டர் புக் செய்ய வேண்டும் என்று பார்க்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் புதிய செய்திகளை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் மாதத்திலிருந்து புதிய டெலிவரி ரூல்ஸ் அமலுக்கு வருகின்றன. இதன்படி நீங்கள் கட்டாயம் கோட் கூற வேண்டி வரும்.

கேஸ் சிலிண்டர் ரூலில் மாற்றங்கள் வரும் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. கேஸ் சிலிண்டர் டெலிவரி நிபந்தனைகளில் மாற்றம் நிகழப் போகிறது. ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் வரும் மாதத்திலிருந்து புதிய ரூல்ஸ் எடுத்து வருகின்றன.

கன்சூமர் உரிமைகளை காப்பாற்றுவதற்கும் கேஸ் சிலிண்டர் மோசடிகளைத் தடுப்பதற்கும் கம்பெனிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. புதிய டெலிவரி சிஸ்டம் எவ்வாறு இருக்கப் போகிறதோ?!

ஒரு முறை தெரிந்து கொள்வோம்…

gas 1
gas 1

கேஸ் சிலிண்டர் புதிய ஹோம் டெலிவரி சிஸ்டத்திற்கு டிஎசி என்று பெயர் வைத்துள்ளார்கள். டிஎசி என்றால் டெலிவரி ஆதென்டிகேஷன்கோட் என்று பொருள்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

கேஸ் சிலிண்டர் புக் செய்தால் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வந்துவிடாது. மீண்டும் நீங்கள் இந்த கோட் நம்பரை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் புக் செய்த பின் ரிஜிஸ்டர் செய்த மொபைல் நம்பருக்கு மெசேஜ் வரும். டெலிவரி பாயிடம் இந்த கோட் கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி ஆகும். அப்போது வரை கோட் உங்களிடமே இருக்கும் .

ஒரு வேளை கேஸ் சிலிண்டர் பெறுபவர் அவருடைய மொபைல் நம்பரை கேஸ் டிஸ்ட்ரிபியூட்டரோடு ரெஜிஸ்டர் செய்து கொள்ளாமல் இருந்தால் டெலிவரி பாயிடம் உள்ள மொபைல் போனில் ஒரு ஆப் இருக்கும். அதன் மூலம் கேஸ் சிலிண்டர் பெறுபவர் அப்போதைக்கப்போது மொபைல் நம்பர் அப்டேட் செய்து கொள்ளலாம். அதன் பின் கோட் வரும்.

இங்கு ஒரு விஷயம் நினைவு கொள்ளவேண்டும். மொபைல் நம்பரை தவறாக அளித்தவர்கள் அல்லது அட்ரஸ் தவறாக அளித்தவர்கள் கேஸ் சிலிண்டர் டெலிவரியின்போது தொல்லைக்கு உள்ளாவர். இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி நின்று போகும்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் முதன் முறையாக 100 நகரங்களில் இந்த டெலிவரி கோட் அமைப்பினை எடுத்து வருகிறார்கள். அதன்பிறகு வரிசைக் கிரமத்தில் பிற நகரங்களுக்கு கூட இந்த சேவைகளை விரிவுபடுத்துவார்கள்.

இந்த டெலிவரி அமைப்பு வீடுகளுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. கமர்சியல் கேஸ் சிலிண்டர்களுக்கு இது பொருந்தாது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img