தீபாவளிக்குப் பின்… நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்பார்! பாஜக., உறுதி!

bihar-results
bihar-results

தீபாவளிக்கு பின்னர் பீகார் மாநில முதலமைச்சராக நிதீஷ் குமார் மீண்டும் பொறுப்பு ஏற்பார் என கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம்  ஆகியவை அறிவித்துள்ளன.

முதல்வர் பதவி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர்களின் ஒருவரும் துணை முதலமைச்சருமான சுசில் மோடி, பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவி ஏற்பார்… கூட்டணியில் எந்தக் கட்சி எத்தனை தொகுதியில் வென்றுள்ளது என்பது முக்கியமல்ல! பா.ஜ.கவின் வெற்றிக்கு கூட்டணியின் இதர கட்சிகள் துணை புரிந்துள்ளன. கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என்று கூறினார். 

அதேபோல், பாட்னாவின் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி, பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் தீபாவளிக்கு பின்னர் பொறுப்பு ஏற்பார் என்றார்.

modi nithish
modi nithish

முன்னதாக பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இரு தினங்களுக்கு முன் வெளியானது. இதில், தனிப்பெரும் கட்சியாக லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 தொகுதிகளுடன் திகழ்கிறது அதேநேரம் ஒரே ஒரு தொகுதி குறைந்து பாஜக 74 தொகுதியுடன் இரண்டாவது பெரிய கட்சியாக திகழ்கிறது 

 தேசிய.ஜனநாயக கூட்டணியில் பாஜகவை அடுத்து ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வென்றுள்ளது. விகாஷீல் இன்சான் கட்சி  4 தொகுதிகளில் வென்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான  முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா 4ல் வெற்றி பெற்றுள்ளது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகட்பந்தனில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மகாகட்பந்தன் கூட்டணிக்கு  மொத்தம் 110 தொகுதிகள் கிடைத்துள்ளது.

பீகார்தேர்தலில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் விஷயமாக அசாதுதீன் ஓவைசியின் நடவடிக்கை அமைந்துள்ளது. 

பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனித்துப்போட்டியிட்ட ஓவைஸியின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து ஓவைஸி கூறியபோது: அரசியலில் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். பீஹாரின் பெரிய கட்சிகள் ஒன்று கூட கூட்டணிக்காக எங்களை அணுகவில்லை. அனைத்து கட்சிகளும் எங்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தின. எங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக அமைந்துள்ளது. பீஹார் மக்கள் எங்களுக்கு ஓட்டளித்து ஆசிர்வதித்துள்ளனர். அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை என்று கூறியுள்ளார் 

மேலும் இந்த தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு தேவையில்லாமல் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு காங்கிரஸிற்கும் செல்வதை நாம் விரும்பவில்லை என்றும் முஸ்லிம்கள் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்றும் பார்த்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்   

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

கட்சி    நின்றது   வென்றது  வெற்றி  % 

RJD             144                 75               52

JDU              115                 43               37

BJP              110                 74               67

Congress       70                 19               27

பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைமையிலான கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஏஐஎம்ஐஎம் 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

இந்த தேர்தலில் ஆர்ஜேடி கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஆர்.ஜே.டி.,க்கு 23.08 சதவீத ஓட்டுகளும்,
74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.,வுக்கு 19.46 சதவீத ஓட்டுகளும்,
43 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஐ.ஜ.த.,வுக்கு 15.40 சதவீத ஓட்டுகளும்,
19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு 9.49 சதவீத ஓட்டுகளும்,
5 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 1.25 சதவீத ஓட்டுகளும்,
2 தொகுதிகளில் வெற்றி பெற்ற சி.பி.ஐ., கட்சிக்கு 0.82 சதவீத ஓட்டுகளும்,
2 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிபிஐ(எம்) கட்சிக்கு 0.65 சதவீத ஓட்டுகளும்
1 தொகுதியில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1.51% ஓட்டுகளும் கிடைத்துள்ளன.
இந்தத் தேர்தலில் விஐபி கட்சி 4, சிபிஐ-எம்எல் 12, எச்ஏஎம் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன. 
202 தொகுதிகளில் மட்டும் சுமார் 6,89,135 பேர் அதாவது 1.69 சதவீதம் பேர் நோட்டாவுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories