வேத கோஷம் முழங்க… புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்!

parliament-boomi-pooja-1
parliament-boomi-pooja-1

ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி #NewParliament4NewIndia

புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வேத மந்திரங்கள் முழங்க இதற்கான அடிக்கல் நாட்டப் பட்டது. தொடர்ந்து, ஜெயின், புத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மத குருமார்களும் இந்த விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 

parliament-boomi-pooja2
parliament-boomi-pooja2

தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் கடந்த 1927 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பழைய கட்டடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து ரூ.971 கோடி  செலவில், புதிய  கட்டடத்தைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. பழைய கட்டடத்துக்கு அருகிலேயே அதை ஒட்டி புதிய கட்டடம் கட்டப்படுகிறது.  இந்த கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் ‘டாடா ப்ராஜெக்ட்ஸ்’ நிறுவனத்திடம் வழங்கப் பட்டுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் தயாராகிவிடும் .

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!
new-parliament-foundation
new-parliament-foundation

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஜெயின், புத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மத குருமார்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 

new-parliamentary-house-all-religion-prayers
new-parliamentary-house-all-religion-prayers

இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ், தொழிலதிபர் ரத்தன் டாடா, வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

new-parliament-building-sample
new-parliament-building-sample

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்றம்  – #NewParliament4NewIndia என்ற ஹேஷ்டாக் ட்விட்டர் சமூகத்  தளத்தில், தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories