February 8, 2025, 5:12 AM
25.3 C
Chennai

தில்லி-நொய்டா சாலையை காலி செய்த விவசாயிகள்! போக்குவரத்து தொடக்கம்!

delhi-noida-road
delhi-noida-road

தில்லி – நொய்டா சாலையில் போக்குவரத்தைத் தடை செய்து தடுப்புகளைப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள், அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது வேண்டுகோளை ஏற்று, சாலைத் தடுப்புகளை அகற்றி, போக்குவரத்துக்கு வழி விட்டுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். 18வது நாளை எட்டியிருக்கிறது இந்தப் போராட்டம்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகளின் போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், விவசாய சங்கங்களுடன் இணைந்து, காலிஸ்தான் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், உள்நாட்டுக் கலகக்காரர்கள், மாவோயிஸ்டுகள் என சில குழுக்கள் இணைந்து, போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

முக்கியமாக தில்லி போக்குவரத்தை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்தில், தில்லியை இணைக்கும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தை நடத்தினர்.

delhi-noida-road1
delhi-noida-road1

இந்த நிலையில், விவசாய சங்கங்களை சமாதானம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய அரசு அவர்களுக்கு இந்த சட்டங்களைக் குறித்து விளக்கியும் வருகிறது.

இதனிடையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தில்லி-நொய்டா நெடுஞ்சாலையில் உள்ள சில்லா எல்லையில், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது.

இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், சாலையை காலி செய்வதாகக் கூறினர். இதனால் அந்த சாலையில் இன்று காலை முதல், சில்லா எல்லை வழியாக தில்லி-நொய்டா இடையே வழக்கமான வாகன போக்குவரத்து தொடங்கியது.

சாலையை விட்டு வெளியேறிய விவசாயிகள் தொடந்து சாலையோரம் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

Topics

பஞ்சாங்கம் பிப்.08 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

Entertainment News

Popular Categories