குண்டூருக்கும் பரவிய ஏலூரு பிரச்னை! மர்ம மயக்கத்தால் மக்கள் கவலை!

Published:

guntur-railwaystation

அண்மையில் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனை குண்டூர் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. ஏலூரில் மக்கள் திடீர் திடீரென மயங்கி விழுவதும் நுரைதள்ளி ஃபிட்ஸ் வருவதும் விந்தையான கூச்சல் இடுவதும் நடந்தது.

தற்போது குண்டூரில் தாசேபல்லி மண்டலம் நடிகுடியில் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்து வருவதால் கவலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பல்லபு ராமகிருஷ்ணா (26) நினைவிழந்து விழுந்ததால் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதன்பிறகு மேல் மருத்துவத்திற்காக குண்டூரு மருத்துவ மனையில் சேர்த்து உள்ளார்கள். அதேபோல் அண்மையில் மேலும் இருவர் மயக்கமடைந்து விழுந்தனர். உள்ளூரில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள் காரணமாகவே இவ்வாறு உடல்நலக் கேடு ஏற்படுகிறது என்று கிராம மக்கள் ஐயம் தெரிவித்தனர்.

ஏலூரில் நடந்த பரபரப்பான சம்பவங்களுக்குப் பிறகு மருத்துவ அறிக்கையில்… நோயாளிகளின் ரத்த சாம்பிள்களை பரிசோதித்ததில் ஈயமும் நிக்கலும் மிக அதிக அளவு உடம்பில் கலந்து உள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு தண்ணீர் மாசு மட்டுமே காரணமல்ல என்றும் பயிர்களில் தெளிக்கும் அதிகளவு பூச்சி மருந்துகளும் ஒரு காரணம் என்றும் கண்டறிந்துள்ளார்கள். இது மிகவும் கவலைக்குரியது என்று அறிவியலாளர் தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img