ஆஞ்சநேயர் விக்ரகத்தை பெயர்த்த குண்டர்கள்! ஆந்திரத்தில் தொடரும் ஆலயங்கள் மீதான தாக்குதலால் அதிர்ச்சி!

Published:

hanuman-shila
hanuman-shila
  • கர்னூலில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்த குண்டர்கள்.
  • காரணம் அறிந்து அனைவரும் அதிர்ச்சி.

கர்னூல் மாவட்டம் கூடூர் மண்டலம் பொன்னகல்லு என்ற கிராமத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகத்தை குண்டர்கள் நெம்பி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்தார்.

ஆலயங்களின் மீது தாக்குதல்களும் விக்கிரகங்களை நாசம் செய்வதும் கண்டிக்கத்தக்கது என்று டிடிபி தலைவர் சந்திரபாபு அறிக்கை விடுத்தார்.

கர்னூல் மாவட்டம் பொன்னகல்லுவில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்துள்ளார்கள். அரசாங்கத்தின் உதாசீனத்தால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று சந்திரபாபு நாயுடு குறை கூறினார். மாநில அரசாங்கம் இது போன்ற தீய செயல்களை மீண்டும் மீண்டும் நடக்க விடுகின்றது என்றும் கோவில்களுக்கு பிரத்தியேகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கோரினார்

ஆஞ்சநேய சுவாமி விக்ரகத்தை குண்டர்கள் எதற்காக தோண்டி எடுத்தார்கள் என்று அறிய வந்தபோது அதிர்ச்சியான விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. புதையல் ஏதாவது கிடைக்கும் என்பதற்காகவே சுவாமி விக்ரகத்தை தோண்டியதாகத் தெரிகிறது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

நூறாண்டு கால வரலாறு உள்ள ஸ்ரீதாஸ் ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தை புதையலுக்காக குண்டர்கள் நாசம் செய்து உள்ளார்கள். புதையலுக்காக பள்ளம் தோண்டி அங்கிருந்த சில விக்ரகங்களை உடைத்தெறிந்து உள்ளார்கள்.

அனுமான் விக்கிரகத்தைத் தோண்டி சிதைத்ததற்காக ஹிந்து சங்கங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் விஹெச்பி காரிய கர்த்தாக்கள் தர்ணா செய்தார்கள்.

கோவில்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடினமான நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img