ஆஞ்சநேயர் விக்ரகத்தை பெயர்த்த குண்டர்கள்! ஆந்திரத்தில் தொடரும் ஆலயங்கள் மீதான தாக்குதலால் அதிர்ச்சி!

hanuman-shila
hanuman-shila
  • கர்னூலில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்த குண்டர்கள்.
  • காரணம் அறிந்து அனைவரும் அதிர்ச்சி.

கர்னூல் மாவட்டம் கூடூர் மண்டலம் பொன்னகல்லு என்ற கிராமத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகத்தை குண்டர்கள் நெம்பி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்தார்.

ஆலயங்களின் மீது தாக்குதல்களும் விக்கிரகங்களை நாசம் செய்வதும் கண்டிக்கத்தக்கது என்று டிடிபி தலைவர் சந்திரபாபு அறிக்கை விடுத்தார்.

கர்னூல் மாவட்டம் பொன்னகல்லுவில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்துள்ளார்கள். அரசாங்கத்தின் உதாசீனத்தால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று சந்திரபாபு நாயுடு குறை கூறினார். மாநில அரசாங்கம் இது போன்ற தீய செயல்களை மீண்டும் மீண்டும் நடக்க விடுகின்றது என்றும் கோவில்களுக்கு பிரத்தியேகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கோரினார்

ஆஞ்சநேய சுவாமி விக்ரகத்தை குண்டர்கள் எதற்காக தோண்டி எடுத்தார்கள் என்று அறிய வந்தபோது அதிர்ச்சியான விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. புதையல் ஏதாவது கிடைக்கும் என்பதற்காகவே சுவாமி விக்ரகத்தை தோண்டியதாகத் தெரிகிறது.

நூறாண்டு கால வரலாறு உள்ள ஸ்ரீதாஸ் ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தை புதையலுக்காக குண்டர்கள் நாசம் செய்து உள்ளார்கள். புதையலுக்காக பள்ளம் தோண்டி அங்கிருந்த சில விக்ரகங்களை உடைத்தெறிந்து உள்ளார்கள்.

அனுமான் விக்கிரகத்தைத் தோண்டி சிதைத்ததற்காக ஹிந்து சங்கங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் விஹெச்பி காரிய கர்த்தாக்கள் தர்ணா செய்தார்கள்.

கோவில்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடினமான நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories