December 5, 2025, 10:04 PM
26.6 C
Chennai

தெலங்காணா முதல்வரின் ‘தத்து’ மகளுக்கு… கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சில் திருமணம்!

kcr-daughter-marriage

இந்த மாதம் 28ஆம் தேதி தெலங்காணா முதல்வர் கேசிஆரின் தத்து மகளுக்கு திருமணம். கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் திருமணம் நடைபெறவுள்ளது.

சிற்றன்னையின் சித்திரவதையிலிருந்து வெளிவந்தபின் பிரதியுஷாவின் நலனை மகிளா சிசு ஸம்ரக்ஷணை அதிகாரிகள் பார்த்துக்கொள்கிறார்கள். முதல்வரின் உத்தரவுப்படி ஐஏஎஸ் அதிகாரி ரகு நந்தன ராவு பிரத்தியேகமாக பிரதியூஷாவின் நலனை கவனித்துக் கொள்கிறார்.

பெற்ற தந்தை மற்றும் சிற்றன்னையின் கைகளில் சித்திரவதைகளுக்கு ஆளாகி கிட்டத்தட்ட சாவு வரை சென்று திரும்பிய பிரத்யூஷா முதல்வரின் ஆதரவில் உடல்நிலை தேறினார்.

உடல்நிலை தேறிய பின் தானே சுயமாக பிரதியூஷாவை வீட்டிற்கு அழைத்து தம்மோடு சேர்ந்து உணவு உண்ணும் வாய்ப்பையும் அளித்ததோடு அந்த சிறுமியை தத்து எடுத்துக் கொள்வதாக கூட முதல்வர் அறிவித்தார்.

இவ்வாறு முதல்வரின் மகளாக மாறி ஆரோக்கியமாகவும் கல்வியிலும் எந்தவித தொந்தரவும் இன்றி வாழ்ந்து வரும் பிரதியூஷா இப்போது ஒரு இல்லாளாக மாறப்போகிறார்.

kcr-daughter-marriage1

ப்ரத்யூஷா தற்போது நர்சிங் கோர்ஸ் படித்து முடித்து ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து சொந்தக் காலில் நிற்கிறார். அவர் தனக்குப் பிடித்த மனிதரோடு புது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

அண்மையில் ஹைதராபாத் வித்யாநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆடம்பரமின்றி சரண்ரெட்டி என்ற இளைஞரோடு பிரத்யூஷாவின் நிச்சயதார்த்தம் நடந்தேறியது. திருமணம் இந்த மாதம் 28ஆம் தேதி ரங்காரெட்டி மாவட்டம் கேசம்பேட்ட மண்டலம் பாட்டிகட்ட கிராமம் லூர்து மாதா தேவாலயத்தில் நடக்க இருக்கிறது. உடுமுல ஜைன்மேரி, மர்ரெட்டி தம்பதிகளின் புதல்வன் சரண்ரெட்டியோடு பிரத்யூஷாவின் விவாகம் நடக்க இருக்கிறது.

திருமணத்திற்கு நேரில் வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார் என்று பிரத்யூஷா தெரிவித்தார். தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிய முதல்வர் மற்றும் அதிகாரிகள், இப்போது நல்ல வாழ்க்கையை தருவதற்கு முன் வந்துள்ள சரண் மற்றும் அவருடைய பெற்றோர் அனைவருக்கும் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக பிரதியூஷா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories