தெலங்காணா முதல்வரின் ‘தத்து’ மகளுக்கு… கிறிஸ்துவ முறைப்படி சர்ச்சில் திருமணம்!

Published:

kcr-daughter-marriage

இந்த மாதம் 28ஆம் தேதி தெலங்காணா முதல்வர் கேசிஆரின் தத்து மகளுக்கு திருமணம். கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் திருமணம் நடைபெறவுள்ளது.

சிற்றன்னையின் சித்திரவதையிலிருந்து வெளிவந்தபின் பிரதியுஷாவின் நலனை மகிளா சிசு ஸம்ரக்ஷணை அதிகாரிகள் பார்த்துக்கொள்கிறார்கள். முதல்வரின் உத்தரவுப்படி ஐஏஎஸ் அதிகாரி ரகு நந்தன ராவு பிரத்தியேகமாக பிரதியூஷாவின் நலனை கவனித்துக் கொள்கிறார்.

பெற்ற தந்தை மற்றும் சிற்றன்னையின் கைகளில் சித்திரவதைகளுக்கு ஆளாகி கிட்டத்தட்ட சாவு வரை சென்று திரும்பிய பிரத்யூஷா முதல்வரின் ஆதரவில் உடல்நிலை தேறினார்.

உடல்நிலை தேறிய பின் தானே சுயமாக பிரதியூஷாவை வீட்டிற்கு அழைத்து தம்மோடு சேர்ந்து உணவு உண்ணும் வாய்ப்பையும் அளித்ததோடு அந்த சிறுமியை தத்து எடுத்துக் கொள்வதாக கூட முதல்வர் அறிவித்தார்.

இவ்வாறு முதல்வரின் மகளாக மாறி ஆரோக்கியமாகவும் கல்வியிலும் எந்தவித தொந்தரவும் இன்றி வாழ்ந்து வரும் பிரதியூஷா இப்போது ஒரு இல்லாளாக மாறப்போகிறார்.

kcr-daughter-marriage1

ப்ரத்யூஷா தற்போது நர்சிங் கோர்ஸ் படித்து முடித்து ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து சொந்தக் காலில் நிற்கிறார். அவர் தனக்குப் பிடித்த மனிதரோடு புது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

அண்மையில் ஹைதராபாத் வித்யாநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆடம்பரமின்றி சரண்ரெட்டி என்ற இளைஞரோடு பிரத்யூஷாவின் நிச்சயதார்த்தம் நடந்தேறியது. திருமணம் இந்த மாதம் 28ஆம் தேதி ரங்காரெட்டி மாவட்டம் கேசம்பேட்ட மண்டலம் பாட்டிகட்ட கிராமம் லூர்து மாதா தேவாலயத்தில் நடக்க இருக்கிறது. உடுமுல ஜைன்மேரி, மர்ரெட்டி தம்பதிகளின் புதல்வன் சரண்ரெட்டியோடு பிரத்யூஷாவின் விவாகம் நடக்க இருக்கிறது.

திருமணத்திற்கு நேரில் வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார் என்று பிரத்யூஷா தெரிவித்தார். தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிய முதல்வர் மற்றும் அதிகாரிகள், இப்போது நல்ல வாழ்க்கையை தருவதற்கு முன் வந்துள்ள சரண் மற்றும் அவருடைய பெற்றோர் அனைவருக்கும் தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக பிரதியூஷா தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img