ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா சாதனை வெற்றி!

india-won
india-won

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. இளம் இந்திய அணியின் சாதனையாக இது பார்க்கப் படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணி, ஒரு நாள் தொடரை இழந்த போதும், டி20 தொடரைக் கைப்பற்றி சாதித்தது. தொடர்ந்து டெஸ்ட் தொடரில், ஒரு போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மூன்றாவது போட்டி, கடுமையான முயற்சியில் ட்ரா ஆனது, எனினும் இரு போட்டிகளில் அட்டகாசமாக வென்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்று, ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது அந்த அணி. இதில், ஆஸ்திரேலியாவின் மர்னஸ் லாபஸ்சேஞ் 108 ரன்னும், ட்ம் பெய்ன் 50 ரன்னும்ம் எடுத்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் டி நடராஜன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாகுர் 67 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஸ் ஹஸ்ல்வுட் 5 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்ச் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

தனது 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 294 ரன்னில் ஆட்டம் இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்னும், டேவிட் வார்னர் 48 ரன்னும் எடுத்து கைகொடுத்தனர். இந்திய தரப்பில், சிராஜ் 5, ஷர்துல் தாகுர் 4 விக்கெட் எடுத்தனர்.

328 ரன் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இந்திய அணியில், சுப்மான் கில் 91 ரன்னும், ரிஷப் பந்த் ஆட்டம் இழக்காமல் 89 ரன்னும் எடுத்து அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தனர். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. தொடரையும் 2-1 என கைப்பற்றியது..

விராட் கோலி, தோல்வியுற்ற முதல் போட்டியுடன் நாடு திரும்பிய நிலையில், கோலி இல்லாமல் அணி வென்றிருப்பதால், சமூகத் தளங்களில் இளம் இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories