நாக்பூரில் தைப்பூச விழா!

IMG-20210128-WA0030
IMG-20210128-WA0030

நாக்பூரில் தைப்பூச விழா
படங்கள், கட்டுரை: ஜெயஸ்ரீ சாரி, நாக்பூர்

தமிழகர்கள் இருக்குமிடமெல்லாம் தமிழ் கடவுளான வேலவனின் புகழும் ஒலித்துக் கொண்டிருக்கும். நாக்பூரில் கார்த்திகேய ஸ்வாமி பக்த சமாஜ், தன் 52-வது தைப்பூச பூஜை திருவிழாவை நான்கு நாட்கள் விழாவாக குஜராத்தி பவனில் கொண்டாடி வருகிறது.

தைப்பூசமான இன்று 30 பெண்கள் பால்குடம் எடுத்தனர்.
வழக்கறிஞர் G. பாலசுப்ரமணியன், செயலாளர், கார்த்திகேய ஸ்வாமி பக்த சமாஜ், கூறுகையில் நாக்பூர் பக்தர்களின் பேராதரவோடு இந்த வருட தைப்பூச திருவிழா புதன்கிழமையில் இருந்து தொடங்கியது.

முதல் நாள் நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற தேக்கடி கணேஷ் மந்திரில் மஹாகணபதி யாகத்துடன் தொடங்கியது. குஜராத்தி பவனில் சக்திவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும், பரதநாட்டியமும் மாலை நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது.

IMG-20210128-WA0031
திருமலை கண்ணன்

தைப்பூசமான இன்று 30 பெண்கள் பால்குடம் எடுத்தனர். சக்திவேலாக பாவிக்கப்பட்ட இறைவனுக்கு ருத்ராபிஷேகமும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமலை கண்ணன் (சென்னை) திருப்புகழ் பற்றி தன் ஆன்மீக உரையை நிகழ்த்தினார்.

முருகப் பெருமானின் ‘ வேலாயுதத்தின் மகிமையை’ பல மேற்கோள்களைக் காட்டி விளக்கினார். லட்சார்ச்சனையும், மஹா தீபாராதனையும் நடைபெற்று, மகாபிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது,” என்றார்.

IMG-20210128-WA0029
IMG-20210128-WA0029

சரஸ்வதி ரெங்கநாதன் மற்றும் அவரது குழுவினர் பஜன்களை பாடினர். மாலை 7 மணி அளவில் பத்ம பூஷன் லேட் P. S. நாராயண ஸ்வாமியின் சிஷ்யரான B. ஜெய்ராம் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

A.ஹரிபாபு நாயுடு, தலைவர், நிர்மலா மணி, துணைத்தலைவர், வழக்கறிஞர் G. பாலசுப்ரமணியன், செயலாளர், கோமதி மணியன், இணை செயலாளர், M.H.சுப்ரமணியன், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் B. ராஜேஸ்வரி, ராமன் ஐயர், V. ராமசந்திரன், C. கிருஷ்ணகுமார், K. சுஜாதா, S. வெங்கடேஷ், R.R. முதலியார் மற்றும் இளைஞர்களின் முயற்சியால் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.

நாக்பூர் பக்தர்களும் அரசின் வழிமுறைகளை பின்பற்றி விழாவில் பங்கேற்கின்றனர். மூன்றாம் நாளான நாளை ஷண்முகா யாகம், விளக்கு பூஜை, வள்ளி கல்யாண மஹோத்சவம் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories