நாக்பூரில் தைப்பூச விழா!

IMG-20210128-WA0030
IMG-20210128-WA0030

நாக்பூரில் தைப்பூச விழா
படங்கள், கட்டுரை: ஜெயஸ்ரீ சாரி, நாக்பூர்

தமிழகர்கள் இருக்குமிடமெல்லாம் தமிழ் கடவுளான வேலவனின் புகழும் ஒலித்துக் கொண்டிருக்கும். நாக்பூரில் கார்த்திகேய ஸ்வாமி பக்த சமாஜ், தன் 52-வது தைப்பூச பூஜை திருவிழாவை நான்கு நாட்கள் விழாவாக குஜராத்தி பவனில் கொண்டாடி வருகிறது.

தைப்பூசமான இன்று 30 பெண்கள் பால்குடம் எடுத்தனர்.
வழக்கறிஞர் G. பாலசுப்ரமணியன், செயலாளர், கார்த்திகேய ஸ்வாமி பக்த சமாஜ், கூறுகையில் நாக்பூர் பக்தர்களின் பேராதரவோடு இந்த வருட தைப்பூச திருவிழா புதன்கிழமையில் இருந்து தொடங்கியது.

முதல் நாள் நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற தேக்கடி கணேஷ் மந்திரில் மஹாகணபதி யாகத்துடன் தொடங்கியது. குஜராத்தி பவனில் சக்திவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும், பரதநாட்டியமும் மாலை நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது.

IMG-20210128-WA0031
திருமலை கண்ணன்

தைப்பூசமான இன்று 30 பெண்கள் பால்குடம் எடுத்தனர். சக்திவேலாக பாவிக்கப்பட்ட இறைவனுக்கு ருத்ராபிஷேகமும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமலை கண்ணன் (சென்னை) திருப்புகழ் பற்றி தன் ஆன்மீக உரையை நிகழ்த்தினார்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

முருகப் பெருமானின் ‘ வேலாயுதத்தின் மகிமையை’ பல மேற்கோள்களைக் காட்டி விளக்கினார். லட்சார்ச்சனையும், மஹா தீபாராதனையும் நடைபெற்று, மகாபிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது,” என்றார்.

IMG-20210128-WA0029
IMG-20210128-WA0029

சரஸ்வதி ரெங்கநாதன் மற்றும் அவரது குழுவினர் பஜன்களை பாடினர். மாலை 7 மணி அளவில் பத்ம பூஷன் லேட் P. S. நாராயண ஸ்வாமியின் சிஷ்யரான B. ஜெய்ராம் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

A.ஹரிபாபு நாயுடு, தலைவர், நிர்மலா மணி, துணைத்தலைவர், வழக்கறிஞர் G. பாலசுப்ரமணியன், செயலாளர், கோமதி மணியன், இணை செயலாளர், M.H.சுப்ரமணியன், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் B. ராஜேஸ்வரி, ராமன் ஐயர், V. ராமசந்திரன், C. கிருஷ்ணகுமார், K. சுஜாதா, S. வெங்கடேஷ், R.R. முதலியார் மற்றும் இளைஞர்களின் முயற்சியால் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.

நாக்பூர் பக்தர்களும் அரசின் வழிமுறைகளை பின்பற்றி விழாவில் பங்கேற்கின்றனர். மூன்றாம் நாளான நாளை ஷண்முகா யாகம், விளக்கு பூஜை, வள்ளி கல்யாண மஹோத்சவம் நடைபெற உள்ளது.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories