செஞ்சுரி அடிச்சவரு அஸ்வின்… துள்ளிக் குதிச்சு சந்தோசப்பட்டவரு மொகமத் சிராஜ்… ஏன் தெரியுமா?!

ashwin
ashwin

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் செஞ்சுரி அடித்து அசத்த, கடைசி விக்கெடுக்கு ஜோடி சேர்ந்து விளையாடிய மொகமத் சிராஜ், தானே செஞ்சுரி அடித்தது போல் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 134 ரன்களில் ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 25 ரன்னிலும், புஜாரா 7 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இன்றைய போட்டியில், புஜாரா 7 ரன்னில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 26 ரன்னிலும், ரிஷப் பன்ட் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அஜின்கியா ரகானே 10, அக்சர் படேல் 7 என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி, 106 ரன்னில் முதல் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேப்டன் விராத் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் இணை நிதானமாக விளையாடி, ரன்கள் சேர்த்தது. 7வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்திருந்த நிலையில், கோலி 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
ashwin-kohli
ashwin-kohli

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட்டுக்கு 202 ரன் என்ற நிலையில் இருந்தது. பின்னர் அஸ்வின் நன்றாக விளையாட, அவருடன் இணைந்திருந்த குல்தீப் யாதவ் 3 ரன்னிலும் இஷாந்த் சர்மா 7 ரன்னிலும் வெளியேறினர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொகம்மத் சிராஜ், அஸ்வினுடன் இணைந்து தாக்குப் பிடித்து விளையாடினார். அஸ்வின் தொடர்ந்து நன்கு அடித்து ஆடி, 16 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 148 பந்தில் 106 ரன் எடுத்து சதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து ஆடிய சிராஜ் 16 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன் எடுத்தது.

அஸ்வின் சதம் அடித்த போது, மொகம்மத் சிராஜ் துள்ளிக் குதித்து பேட்டை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அஸ்வின் சதத்துக்கு உறுதுணையாக இருந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியதாக டிவிட்டர்வாசிகள் அவரைப் புகழ்ந்து தள்ளினர்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories