December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

செஞ்சுரி அடிச்சவரு அஸ்வின்… துள்ளிக் குதிச்சு சந்தோசப்பட்டவரு மொகமத் சிராஜ்… ஏன் தெரியுமா?!

ashwin
ashwin

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் செஞ்சுரி அடித்து அசத்த, கடைசி விக்கெடுக்கு ஜோடி சேர்ந்து விளையாடிய மொகமத் சிராஜ், தானே செஞ்சுரி அடித்தது போல் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 134 ரன்களில் ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 25 ரன்னிலும், புஜாரா 7 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இன்றைய போட்டியில், புஜாரா 7 ரன்னில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 26 ரன்னிலும், ரிஷப் பன்ட் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அஜின்கியா ரகானே 10, அக்சர் படேல் 7 என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி, 106 ரன்னில் முதல் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேப்டன் விராத் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் இணை நிதானமாக விளையாடி, ரன்கள் சேர்த்தது. 7வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்திருந்த நிலையில், கோலி 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ashwin-kohli
ashwin-kohli

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட்டுக்கு 202 ரன் என்ற நிலையில் இருந்தது. பின்னர் அஸ்வின் நன்றாக விளையாட, அவருடன் இணைந்திருந்த குல்தீப் யாதவ் 3 ரன்னிலும் இஷாந்த் சர்மா 7 ரன்னிலும் வெளியேறினர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொகம்மத் சிராஜ், அஸ்வினுடன் இணைந்து தாக்குப் பிடித்து விளையாடினார். அஸ்வின் தொடர்ந்து நன்கு அடித்து ஆடி, 16 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 148 பந்தில் 106 ரன் எடுத்து சதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து ஆடிய சிராஜ் 16 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன் எடுத்தது.

அஸ்வின் சதம் அடித்த போது, மொகம்மத் சிராஜ் துள்ளிக் குதித்து பேட்டை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அஸ்வின் சதத்துக்கு உறுதுணையாக இருந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியதாக டிவிட்டர்வாசிகள் அவரைப் புகழ்ந்து தள்ளினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories