நாகரஹோளே வனப்பகுதியில் தீ விபத்து!

fire in forest - 2026

நாகரஹோளே வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக 20 ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் நாசமாகி உள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

சாம்ராஜ்நகர் தாலுகா, பந்திப்பூர் தேசிய வனப்பகுதியை ஒட்டியுள்ள நாகரஹோளே புலிகள் சரணாலய பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவி கோபாலசுவாமி மலை, குளகி ஆகிய வனப்பகுதியில் பரவியது. அதை தொடர்ந்து மத்தூரு, குந்தகெரே, பேடுகுளி ஆகிய வனப்பகுதிகளிலும் தீ பற்றிக்கொண்டது.

இது குறித்த தகவல் மாவட்ட வனப்பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வந்துபார்த்து, உடனடியாக தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.

சுமார் 38 வாகனங்களில் வந்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வனப்பகுதியில் காற்று பலமாக வீசுவதாலும், இலையுதிர் காலம் என்பதாலும் மரம், செடிகளில் இருந்து இலைகள் உலர்ந்து கீழே விழுந்திருப்பதாலும் தீ வேகமாக பரவி சுமார் 20 ஹெக்டேர் அளவில் வனப்பகுதியை நாசம் செய்துள்ளதாக வனபாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

இது இயற்கையாக ஏற்பட்ட தீ விபத்தல்ல. யாரோ விஷமிகள் தீ வைத்துள்ளனர். அவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீ விபத்து காரணமாக வனப்பகுதியில் மான், நரி, பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் உயிரிழந்துள்ளன என தெரியவருகிறது. தொடர்ந்து தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories