உங்களுக்கு கொரோனா வந்த மெசேஜ்.. காரை மின் கம்பத்தில் மோதிய பெண்! பீதியால் உதவாத மக்கள்!

car accident kerala - 2026

செல்போனில் வந்த கொரோனா தகவலால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், பதற்றத்தில் காரை மின்கம்பத்தில் மோதவிட்ட துயர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடக்கல் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் கடந்த திங்கள் கிழமை காலை, தனது இரு குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, கொல்லத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளார்.

அங்கு ரத்தம் மற்றும் சளி மாதிரியை கொடுத்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் அவர் காரில் புறப்பட்டு சிறிது தூரம் வந்ததும், அவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக கூறி செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ந்த அந்தப்பெண், செய்வதறியாது பதற்றமடைந்துள்ளார்.
ஏற்கனவே கார் ஓட்டியபடியே இருந்த அவர், கவனம் சிதறியதும் நேராக முன்னால் இருந்த மின் கம்பம் மீது வேகமாக மோதியுள்ளார். இதில் அவரது கார் கம்பத்தில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்தது.

ஆனால் அவர் முகத்தில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்த சம்பவத்தை பார்த்த அவ்வழியே சென்றவர்களும் உதவ முன்வரவில்லை. மேலும் உதவ வந்தவர்களும் பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரிந்ததும் பின்வாங்கியுள்ளனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் பெண் அங்கேயே காயங்களுடன் இருந்தார்.
வெகு தாமத்திற்கு பின் வந்த தீயணைப்பு துறையினர், பெண்ணிற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடையை வழங்கியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து வந்த அவரது உறவு பெண், பெண்ணை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories