December 5, 2025, 9:26 PM
26.6 C
Chennai

உங்களுக்கு கொரோனா வந்த மெசேஜ்.. காரை மின் கம்பத்தில் மோதிய பெண்! பீதியால் உதவாத மக்கள்!

car accident kerala - 2025

செல்போனில் வந்த கொரோனா தகவலால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், பதற்றத்தில் காரை மின்கம்பத்தில் மோதவிட்ட துயர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடக்கல் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் கடந்த திங்கள் கிழமை காலை, தனது இரு குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, கொல்லத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளார்.

அங்கு ரத்தம் மற்றும் சளி மாதிரியை கொடுத்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் அவர் காரில் புறப்பட்டு சிறிது தூரம் வந்ததும், அவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக கூறி செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ந்த அந்தப்பெண், செய்வதறியாது பதற்றமடைந்துள்ளார்.
ஏற்கனவே கார் ஓட்டியபடியே இருந்த அவர், கவனம் சிதறியதும் நேராக முன்னால் இருந்த மின் கம்பம் மீது வேகமாக மோதியுள்ளார். இதில் அவரது கார் கம்பத்தில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்தது.

ஆனால் அவர் முகத்தில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்த சம்பவத்தை பார்த்த அவ்வழியே சென்றவர்களும் உதவ முன்வரவில்லை. மேலும் உதவ வந்தவர்களும் பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரிந்ததும் பின்வாங்கியுள்ளனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் பெண் அங்கேயே காயங்களுடன் இருந்தார்.
வெகு தாமத்திற்கு பின் வந்த தீயணைப்பு துறையினர், பெண்ணிற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடையை வழங்கியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து வந்த அவரது உறவு பெண், பெண்ணை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories