வாகனப் பதிவு: உரிமையாளர் பெயருடன் நாமினி! புதிய விதிமுறை!

vehicles
vehicles

வாகனத்தை பதிவு செய்யும்போது மாற்று உரிமையாளரின் பெயரைக்குறிப்பிடும் வகையில், மோட்டார் வாகன விதிகளில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு வாகனத்தைப் பதிவு செய்யும்போது, அதன் உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியம். அந்த வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், வாகனத்துக்கு உரிமை கோருவதில் சிக்கல் ஏற்படும் சூழல் இருக்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் குடும்பத்தினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதற்குத் தீர்வுகாணும் வகையில், வாகனத்தைப் பதிவு செய்யும்போதே அதன் உரிமையாளர் பெயருடன், மாற்று உரிமையாளரின் பெயரையும் குறிப்பிடுவதற்கு மோட்டார் வாகன விதிகளில், மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வாகனத்தைப் பதிவு செய்யும்போது, மாற்று உரிமையாளரின் பெயரையும் சேர்த்து குறிப்பிடலாம். இல்லையெனில், வாகனத்தை பதிவு செய்த பிறகு, இணையவழியில் மாற்று உரிமையாளரின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு குறிப்பிடும்போது, மாற்று உரிமையாளரின் அடையாள அட்டையைத் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அந்த வாகனத்தைப் பதிவு செய்யும்போது, குறிப்பிடப்பட்ட மாற்று உரிமையாளருக்கு அந்த வாகனம் சொந்தமாகும்…

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

வாகன உரிமையாளர் இறந்துவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் அது தொடர்பான தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, மாற்று உரிமையாளர் தெரியப்படுத்த வேண்டும்.

அதன்பிறகே அந்தவாகனத்தை, மாற்று உரிமையாளர் பயன்படுத்த முடியும். மாற்று உரிமையாளரை மாற்றிக்கொள்வதற்கும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ”வாகன உரிமையாளர் இறந்துவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பின்னர், வாகன உரிமையாளரின் இறப்புச் சான்று உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இது போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கும் பொருந்தும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திருத்தப்படி, வாகன உரிமையாளர் இறந்த பின்னர், அவர் குறிப்பிட்டுள்ள மாற்று உரிமையாளர் வாகனத்தைப் பயன்படுத்தலாம். எனினும், வாகன உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் மாற்று உரிமையாளரின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories