தீமாபுர்: நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞரை சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பழங்குடியினப் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டு, தீமாபுர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபரீத் கான் என்பவரை, சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, தலைநகர் கோஹிமாவில், முதல்வர் டி.ஆர்.ஜீலியாங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பணியிடை நீக்கம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. ஃபரீத் கான் தாக்கப்பட்ட விவகாரத்தில், நிலைமையைக் கட்டுப்படுத்த தவறியதாக, மத்திய சிறை கண்காணிப்பாளர் சுபா போம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மெரன் ஜாமிர், மாவட்ட ஆட்சியர் வஜோப் கென்யி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்தத் தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வெப்ரசா நைகா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் டி.ஆர்.ஜீலியாங் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வகுப்புக் கலவரமாக மாறியுள்ளது. இரு மாநிலங்களில் இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..
தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...
அரசியல்
ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து
சற்றுமுன்
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...
சற்றுமுன்
பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...
தமிழகம்
அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!
எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

