01-04-2023 9:25 AM
More

    To Read it in other Indian languages…

    ஒலிம்பிக்கில் இன்று.. இந்திய அணியின் நிலை!

    olympic banner kvb
    olympic banner kvb

    ஒலிம்பிக்கில் இன்று.. இந்திய அணியின் நிலை! 2.08.2021
    – முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

    திங்கள்கிழமை மழை குறுக்கிட்ட இறுதிப் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் கமல்பிரீத் கவுர் தனது முதல் ஒலிம்பிக்கில் 63.70 மீ சிறந்த வீசுதலுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார். சனிக்கிழமையன்று தகுதிப் போட்டியில் இரண்டாவது இடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 25 வயதான கவுர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையால் குறுக்கிடப்பட்ட ஆறு சுற்றுப் போட்டிகளிலும் ஆறாவது இடம்தான் பெறமுடிந்தது.

    ஒலிம்பிக்கில் தனிநபர் நிகழ்வின் ஜம்பிங் பைனலுக்கு முன்னேறிய இந்திய குதிரையேற்ற வீரர் ஃபுஆத் மிர்சா, ஜம்பிங் (தனிநபர்) இறுதிப் போட்டியில் 23 வது இடத்தைப் பிடித்தார்.

    cheerindiaolympics 1
    cheerindiaolympics 1

    இந்திய பெண்கள் ஹாக்கி அணி, காலிறுதியில் ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இன்று வரலாறு படைத்தது. இதன் மூலம், இந்தியா தனது ஒலிம்பிக் வரலாற்றில், பெண்கள் ஹாக்கிப் போட்டியில், முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

    பெண்கள் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் டியூட்டி சந்த் தனது சீசனின் சிறந்த நேரமான 23.85 வினாடிகளில் ஓடி முடித்தார் ஆனால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் தகுதிச்சுற்றுப் போட்டியில் கடைசி இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

    இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இன்று மற்றொரு ஏமாற்றமான நாள். ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் சஞ்சீவ் ராஜ்புத் ஆண்கள் 50 மீ ரைபிள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை.

    சிறப்புச் செய்தி 1: நெதர்லாந்தைச் சேர்ந்த சிஃபான் ஹசன் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியின் தகுதிச் சுற்றில் ஓடும்போது கீழே விழுந்துவிட்டார். ஆனால் அவர் எழுந்து மீண்டும் ஓடி அந்த ஓட்டத்தில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். கென்யாவின் எடினா ஜெபிடாக் ஹாசனுக்கு முன்னால் ஒரு தடுமாறி விழுந்டார். கூடவே சிஃபான் ஹசனையும் கீழே விழ வைத்தார்.

    எவ்வாறாயினும், இந்த விபத்து டச்சு ஓட்டப்பந்தய வீரரின் வெற்றி உணர்வைத் தடுக்கவில்லை, ஏனெனில் அவர் இறுதிப்போட்டியிலும் நன்றாக ஓடி தங்கப் பதக்கம் பெற்றார்.

    சிறப்புச் செய்தி 2: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலின் இறுதி காட்சி. இத்தாலியின் ஜியான்மார்கோ தம்பேரி, (தலையில் சிண்டு வைத்திருந்தவர்) கட்டாரின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிமை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். இருவரும் 2.37 மீட்டர் தாவி சம நிலையில் இருந்தனர். ஒலிம்பிக் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் இன்னும் மூன்று வாய்ப்புகள் கொடுத்தனர், ஆனால் அவர்களால் 2.37 மீட்டருக்கு மேல் அதிகம் தாண்ட முடியவில்லை.

    இருவருக்கும் மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது, ஆனால் காலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தம்பேரி கடைசி முயற்சியிலிருந்து விலகினார். பார்ஷிமுக்கு முன்னால் வேறு எதிரிகள் இல்லாத தருணம், அவர் தனியாக தனியாக தங்கத்தை எளிதில் பெற்றிருக்கலாம்.

    ஆனால் பார்சிம் அதிகாரியிடம் “இறுதி முயற்சியிலிருந்து நான் விலகினால் தங்கத்தை எங்கள் இருவருக்கும் பகிர முடியுமா?” அதிகாரி சரிபார்த்து உறுதிசெய்து, “ஆம், தங்கம் உங்கள் இருவருக்கும் இடையில் பகிரப்படும்” என்று கூறினார். பார்சிம் உடனே யோசிக்காமல் கடைசி முயற்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதைப் பார்த்த இத்தாலிய விளையாட்டு வீரர் தம்பேரி ஓடி வந்து பார்ஷிமை கட்டிப்பிடித்து அலறினார். அங்கு நாம் பார்த்தது நம் இதயங்களைத் தொடும் ஒரு காட்சி. விளையாட்டுகளில் அன்பின் பெரும் பங்கு. இது மதங்கள், வண்ணங்கள் மற்றும் எல்லைகளை பொருத்தமற்றதாக ஆக்கும் விவரிக்க முடியாத விளையாட்டுத் திறன். ஒலிம்பிக்கை இத்தகைய உணர்விற்காகத்தான் டீ குபர்த்தீன் உருவாக்கினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    13 + 14 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,645FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-