அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி… இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

Published:

youth died after excercise
youth died after excercise

வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போன்றது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவே அதற்கு உதாரணம். மரணம் எப்போது எவ்வாறு நிகழும் என்று யாருமே சொல்ல முடியாது.

எந்த கணத்தில் வேண்டுமென்றாலும் அந்த நீர்க்குமிழி உடைந்து விடும் என்று வேதாந்தம் பேசுவதுண்டு.

அப்போது வரை மிகவும் ஆரோக்கியமாக இருந்த ஒரு இளைஞர் ஒரேடியாக மயங்கி விழுந்தார். அவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழப்பவர்கள் தொடர்பான வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருவதை பார்க்கிறோம். அப்படிப்பட்ட வீடியோக்கள் நிறைய வந்துள்ளன. புதியதாக இந்த வீடியோ நெட்டிசன்களை பயத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

சூரத்தில் உள்ள கோல்டு ஜிம் என்ற உடற்பயிற்சி நிலையத்தில் 33 வயது இளைஞர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். தினமும் செய்வது போலவே அந்த இளைஞர் பயிற்சி செய்தார். ஆனால் இதயத்தில் ஏதோ வலி அவரை வருத்தியது.

அதனால் அந்த ஜிம்மில் உள்ள படிக்கட்டுகளில் உட்கார்ந்தார். இதயத்தில் எரிச்சலாக இருந்தது. தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் என்று நினைத்து தண்ணீர் குடித்தார். ஆனாலும் வலி சற்றும் குறையவில்லை. வலியால் துன்பப்பட்டுக் கொண்டே இருந்தவர் இறுதியில் திடீரென்று மயங்கி விழுந்தார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கீழே மயங்கி விழுந்த போதே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதயம் நின்று விட்டதால் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அந்த இளைஞர் மரணித்ததாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் அந்த ஜிம்மில் ஏற்பாடு செய்திருந்த சிசி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக மாறியது.

முப்பத்தி மூன்று வயது சிறு வயதிலேயே மாரடைப்பால் இளைஞன் மரணித்ததால் அனைவருக்கும் கவலையையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.

ஆனால் அந்த இளைஞன் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மாரடைப்பு என்றால் என்ன? இருந்தாற்போல் இருந்து இதயம் வேலை செய்வதை நிறுத்தி விடுவதையே மாரடைப்பு என்கிறார்கள். உடலில் அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமலே இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இதயத்தில் ஏற்படும் மின்சார அதிர்வுகளே இதற்கு காரணம். இந்த அதிர்வுகள் காரணமாக இதயம் அடித்துக் கொள்வதில் பேலன்ஸ் தாறுமாறாகி அதனால் ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக மூளை, இதயம், உடலிலுள்ள பிற பாகங்களுக்கு ரத்தம் பாய்வது நின்று போகிறது. இதன் காரணமாக நோயாளி நினைவிழந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு நாடி கூட நின்று போகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img