February 22, 2026, 8:27 AM
26.1 C
Chennai

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி… இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

youth died after excercise
youth died after excercise

வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போன்றது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவே அதற்கு உதாரணம். மரணம் எப்போது எவ்வாறு நிகழும் என்று யாருமே சொல்ல முடியாது.

எந்த கணத்தில் வேண்டுமென்றாலும் அந்த நீர்க்குமிழி உடைந்து விடும் என்று வேதாந்தம் பேசுவதுண்டு.

அப்போது வரை மிகவும் ஆரோக்கியமாக இருந்த ஒரு இளைஞர் ஒரேடியாக மயங்கி விழுந்தார். அவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழப்பவர்கள் தொடர்பான வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருவதை பார்க்கிறோம். அப்படிப்பட்ட வீடியோக்கள் நிறைய வந்துள்ளன. புதியதாக இந்த வீடியோ நெட்டிசன்களை பயத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

சூரத்தில் உள்ள கோல்டு ஜிம் என்ற உடற்பயிற்சி நிலையத்தில் 33 வயது இளைஞர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். தினமும் செய்வது போலவே அந்த இளைஞர் பயிற்சி செய்தார். ஆனால் இதயத்தில் ஏதோ வலி அவரை வருத்தியது.

அதனால் அந்த ஜிம்மில் உள்ள படிக்கட்டுகளில் உட்கார்ந்தார். இதயத்தில் எரிச்சலாக இருந்தது. தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் என்று நினைத்து தண்ணீர் குடித்தார். ஆனாலும் வலி சற்றும் குறையவில்லை. வலியால் துன்பப்பட்டுக் கொண்டே இருந்தவர் இறுதியில் திடீரென்று மயங்கி விழுந்தார்.

அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கீழே மயங்கி விழுந்த போதே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதயம் நின்று விட்டதால் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அந்த இளைஞர் மரணித்ததாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் அந்த ஜிம்மில் ஏற்பாடு செய்திருந்த சிசி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக மாறியது.

முப்பத்தி மூன்று வயது சிறு வயதிலேயே மாரடைப்பால் இளைஞன் மரணித்ததால் அனைவருக்கும் கவலையையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.

ஆனால் அந்த இளைஞன் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மாரடைப்பு என்றால் என்ன? இருந்தாற்போல் இருந்து இதயம் வேலை செய்வதை நிறுத்தி விடுவதையே மாரடைப்பு என்கிறார்கள். உடலில் அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமலே இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இதயத்தில் ஏற்படும் மின்சார அதிர்வுகளே இதற்கு காரணம். இந்த அதிர்வுகள் காரணமாக இதயம் அடித்துக் கொள்வதில் பேலன்ஸ் தாறுமாறாகி அதனால் ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக மூளை, இதயம், உடலிலுள்ள பிற பாகங்களுக்கு ரத்தம் பாய்வது நின்று போகிறது. இதன் காரணமாக நோயாளி நினைவிழந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு நாடி கூட நின்று போகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories