December 5, 2025, 8:41 PM
26.7 C
Chennai

உத்தரவை செயல்படுத்தாத 5 ஐஏஎஸ்., அதிகாரிகளுக்கு சிறை தண்டனை: ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி!

ap-high-court
ap-high-court

ஆந்திரா உயர் நீதிமன்றம் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. அரசாங்கத்தின் தலைமை மருத்துவ அதிகாரியோடு கூட முக்கியத் துறைகளின் அதிகாரிகள் உட்பட ஐந்து பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தின் மீது ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நடந்து வரும் பின்னணியில் 2021 செப்டம்பர் 2ம் தேதி வியாழக் கிழமை இந்த முக்கிய உத்தரவு வெளிவந்துள்ளது.

ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் ஒரேயடியாக ஐந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதித்ததோடு அபராதமும் விதித்து பரபரப்பு உத்தரவுகள் வெளியிட்டது.

நெல்லூரு மாவட்டம் தாள்ளபாக்கத்தைச் சேர்ந்த சாயிபிரம்மா என்ற 62 வயது விதவைப் பெண்மணியிடமிருந்து நிலத்தை எடுத்துக் கொண்ட அதிகாரிகள் அதற்கான இழப்பீடு அளிக்கவில்லை. மாநில அரசாங்கம் மனநலம் குன்றியவர்களுக்கான தேசிய நிறுவனம் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது.

ஆனால் குறிப்பிட்டபடி இழப்பீடு அளிக்காததால் 2017ல் அப்பெண்மணி உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிகாரிகள் மீது தவறு கண்டது. அப்பெண்மணிக்கு மாநில அரசு வெளியிட்ட அரசு உத்தரவின்படி உரிய இழப்பீடுகளை மூன்று மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனாலும் அந்த உத்தரவு அமலுக்கு வரவில்லை. அதனால் மனுதாரர் மீண்டும் 2018ல் நீதிமன்றத்தை நாடினார். அண்மையில் இந்த விவகாரத்தின் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், இதற்குப் பொறுப்பான ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் 2021 மார்ச் 30 அன்று ஆந்திர அரசாங்கத்தால் இழப்பீடு வழங்கப்பட்டது.

நீதிபதி பட்டு தேவானந்த் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நீதிமன்றத் தீர்ப்புக்கு கீழ்படியாததாலும் அந்த முதிய பெண்மணி சொல்லொணா துயரங்களுக்கு ஆளானார் என்று அறிவித்தார். அதிகாரிகள் கோரிய மன்னிப்பை நீதிபதி ஏற்க மறுத்தார். வழக்கு செலவுகளுக்காக மனுதாரருக்கு மாநில அரசு ரூபாய் ஒரு லட்சம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்கு முன்பு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையின் கீழ் உயர் நீதிமன்றம் சிறை தண்டனைகளோடு கூட அபராதமும் விதித்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் வருவாய்த்துறை தலைமைச் செயலருமாக இருந்த மன்மோகன் சிங்குக்கு ஒரு மாத சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. அப்போதைய நெல்லூரு ஆட்சியர் சேஷகிரிபாபுவுக்கு இரண்டு வார சிறை தண்டையோடு ஆயிரம் ரூபாய் அபராதம், தற்போதைய நிதி அமைச்சக செயலாளர் எஸ்.எஸ் ராவத்துக்கு ஒரு மாத சிறை தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும், தலைமை மருத்துவ அலுவலகத்தில் ஜிஎடி பொலிடிகல் செயலாளராக உள்ள ரேவு முத்யால ராஜுவுக்கு இரண்டு வார சிறை தண்டனையும் அபராதமும் விதித்தது.

அதே போல் மற்றுமொரு ஐஏஎஸ் அதிகாரி இந்தியாஜ் என்பவருக்கு இரண்டு வார சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஹை கோர்ட் உத்தரவிட்டது.

இதில் அதிகாரிகளுக்கு விதித்த அபராதங்களை அவர்களின் சம்பளத்திலிருந்து வசூல் செய்து மனுதாரருக்கு கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதனால் அதிகாரிகளின் நிலை இப்போது சங்கடமாகியுள்ளது. அவர்களுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதங்களின் மீது மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக ஒரு மாத காலம் தண்டனைகளை நிறுத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories