December 5, 2025, 7:02 PM
26.7 C
Chennai

பரிகாரம் என்று பணம் நகை பறித்த போலி சாமியார்!

samiyar
samiyar

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குறி சொல்லவதாக கூறி வீட்டை இடிக்க வைத்து பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் சக்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விதவிமான தோற்றங்களில் முகநூலில் தன்னுடைய படங்களை அப்லோடு செய்து, ‘சாமியர்களின் சூப்பர் ஸ்டார்’ என்று தனக்கு தானே பாறைசாற்றி கொண்டவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தினை சேர்ந்த சக்தி என்ற ஸ்ரீலஸ்ரீ சக்தி சுவாமிகள் என்று தனக்கு பெயர் வைத்துக் கொண்ட நபர்.

விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (37) என்பவர் விளாத்திக்குளம் – நாகலாபுரம் சாலையில் ‘சக்தி வாராகி’ என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பல வித பூஜைகள் நடத்தி, வட்ட வடிவில் கோடுகள் போட்டு அதற்கு மத்தியில் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பொதுமக்கள் மத்தியல் தன்னை சக்தி வாய்ந்த ஒரு சாமியார் போல காண்பித்துக் கொண்டு ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

விளாத்திக்குளம் அருகில் உள்ள கரிசல்குளத்தினை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி தங்கபேச்சியம்மாள் (52) எண்ணினாள். விபத்தில் இவர் கணவர் இறந்து விட்ட நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சக்தியின் ஜோதிட நிலையம் சென்று குறி கேட்டுள்ளார்.

sakthi
sakthi

அப்போது சக்தி அந்தப் பெண்ணிடம், இறந்த போன உன் கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை, உனது வீட்டை இடித்து மாற்றி அமைத்தால் தான் உன் கணவர் ஆத்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார். பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் பேச்சியம்மாளிடம் இரண்டறை சவரன் நகையை வாங்கியுள்ளார்.

பின்னர் அவரிடம் 30 ஆயிரம் கொடுத்து வீட்டை இடிக்க சொல்லியதாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துள்ளார். அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்சனைகள் தீரவில்லை என்று அப்பெண் மீண்டும் இந்த போலி சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்.

அப்போது அவர் இந்தப் பெண்ணிடம் உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூபாய் 3500ம் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்து தருகிறேன் உனது பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி அந்தப் பெண்ணும் 7 கிராம் தங்கத்தை உருக்கி அவரிடம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை, அந்த 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

பணத்தைத் திருப்பிக் கேட்ட அந்தப் பெண்ணிடம், உனக்கு செய்வினை வைத்து கை, கால்களை விளங்காமல் செய்து விடுவேன் என்று சாமியார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளரை உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி சாமியார் சக்தி என்பவரை கைது செய்தனர். மேலும் இது போன்று எத்தனை பேரை மோசடி செய்துள்ளார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

sakthi samiyar
sakthi samiyar

கைது செய்யப்பட்டுள்ள சக்தி ஏற்கனவே இது போன்று பெண் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. விபரம் அறியாத பெண்களை ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்றுவது, பெண்களை வசியம் செய்து தருகிறேன் என்ற பெயரில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பணத்தினை கறந்துள்ளார். ஆனால் வெளியே சொன்னால் தங்களுக்கு அசிங்கம் என்று நினைத்து பலரும் புகார் கொடுக்க முன்வரவில்லை என்கின்றனர் போலீசார்.

சக்தியின் உண்மையான பெயர் சக்தி இல்லை என்பதும் அவரது உண்மையான பெயர் முனீஸ்வரன் என்றும், சக்திமான் சீரியல் அவருக்கு அதிகமாக பிடிக்கும் என்பதால் முனீஸ்வரன் என்ற பெயரை சக்தி என்று மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. புகைப்படக்கலைஞராக தொடங்கி பின்னர் உள்ளுர் தொலைக்காட்சி நடத்தி தற்பொழுது சுவாமிகளாக சக்தி மாறியுள்ளார்.

இதுபோன்று போலி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், போலி சாமியார் சக்தியினால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும், புகார் கொடுத்தால் போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories