ஓவலில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றி!

eng vs ind test
eng vs ind test

~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா-இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட், ஐந்தாவது நாள், கென்னிங்டன் ஓவல், லண்டன், 6 செப்டம்பர் 2021 இந்தியாவின் மகத்தான வெற்றி பெற்றது..

இறுதி ஸ்கோர் –
இந்தியா 191 (தாக்கூர் 57, கோஹ்லி 50, வோக்ஸ் 4-55) மற்றும் 466 (ரோஹித் 127, புஜாரா 61, தாக்கூர் 60, பந்த் 50, வோக்ஸ் 3-83)

இங்கிலாந்து 290 (போப் 81, வோக்ஸ் 50, உமேஷ் 3-76) மற்றும் 210 (ஹமீட் 63, பர்ன்ஸ் 50, உமேஷ் 3-60)

இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

ind eng 4th test
ind eng 4th test

ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான ரிவர்ஸ் ஸ்விங், ரவீந்திர ஜடேஜாவின் கஞ்சத்தனமான பந்து வீச்சு, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் கடினமான முக்கியமான விக்கட்டுகளை எடுத்தது ஆகியவை இந்தியாவை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 3 விக்கட் இழப்பிற்கு 53 ரன் எடுத்தது. இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் அதிகம் எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியா விக்கட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது. மூன்றாம் ஆட்ட முடிவில் இந்திய அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் ஆட்டத்தில் இந்திய் அணி 466 ரன்களுடன் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 77 ரன் கள் எடுத்திருந்தது.

இறுதி நாளில் இந்தியாவின் பணி 90 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது. இது நேரடியான ஆனால் அரிதாந பணியாகும். அணியில் அவர்களது சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் வேறு இல்லை. மேலும் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை. ஆனால் இங்கிலாந்து ஜொலிக்க முடியாத இடங்களில் இந்தியர்கள் வெற்றி பெற்றனர்,

மதிய உணவுக்குப் பிறகு பும்ரா ஆறு ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 6 ரன் எனச் சிறப்பாக பந்து வீசினார். ஓலி போப்பின் விக்கட்டை எடுத்தபோது விரைவான 100 விக்கட்டுகளை 24ஆவது மேட்சில் எடுத்த சாதனையைச் செய்தார். இதற்கு முன்னர் கபில்தேவ் இதே சாதனையை 25 மேட்சுகளில் செய்தார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

அஸ்வினைத் தவிர்த்ததற்கான காரணத்தை டாஸின்போது கோஹ்லி சொன்னார். ஜடேஜா, இங்கிலாந்தின் இடது கை வீரர்களுக்கு எதிராக ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதே அந்த விளக்கம். இந்த விஷயத்தில் அஸ்வின் இன்னமும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இதனால் அந்த விளக்கம் சில குழப்பங்களைத் தூண்டியது. ஆனால் ஜடேஜாவின் வெற்றி அவரது தேர்வை உறுதி சரிதான் என உரக்கச் சொன்னது. அவர் மொயீன் அலிக்கு வீசிய முதல் பந்தில் மொயின் அலி, சூர்யகுமார் யாதவுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தாமதமாக இந்தியா புதிய பந்தை எடுத்தது, உமேஷ் மீண்டும் விக்கட் எடுத்தார். கடைசி இரண்டு விக்கட்டுகளும் விரைவாக விழுந்தன.

ஐந்தாவது இறுதி டெஸ்ட் மான்செஸ்டரில் செப்டெம்பர் 10 முதல் 14 வரை நடக்கவுள்ளது. இந்திய அணி அந்த டெஸ்டிலும் வெற்றி பெறவேண்டும் அல்லது ட்ரா செய்யவேண்டும். அப்போதுதான் உலக டெஸ்ட் கோப்பைத் தொடரில் முன்னிலை வகிக்க முடியும்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories