காரில் கடத்திய ஐவர்! காவலன் ஆப்பால் ஆப்பு வைத்த சிறுமி!

kidnap
kidnap

மில்லில் வேலை பார்த்த சிறுமியை காரில் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக அந்த சிறுமி தனது தாய் மற்றும் 70 வயது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

அதன்பின் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசூரில் ஒரு தனியார் மில்லில் சிறுமி தொழிலாளியாக வேலையில் சேர்ந்துள்ளார்.

ஆனால் கொரானா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூரை சேர்ந்த அண்ணாமலைக்கும் திருமணம் நடைபெற்றது.

இது குழந்தை திருமணம் என்பதால் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் அந்த சிறுமியை மீட்டு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு மையத்தில் இருந்த அந்த சிறுமியை அவருடைய பாட்டி கடந்த மாதம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த சிறுமி மீண்டும் அரசூரில் தான் பணிபுரிந்த மில்லில் சேர்ந்து விட்டார்.

அங்கு சிறுமி வேலை செய்து வந்த நிலையில் மில்லுக்கு அவரின் பாட்டி காரில் சென்றுள்ளார். அதன்பின் தன்னுடன் சிறுமியை அனுப்பிவைக்குமாறு பாட்டி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மில் நிர்வாகத்தினரும் சிறுமியை பாட்டியுடன் அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமியின் பாட்டியுடன் சேர்ந்து அண்ணாமலை மற்றும் அவருடைய உறவினர்களான கவுரி, பஞ்சமூர்த்தி, பழனி ஆகியோரும் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுடன் காரில் செல்வதற்கு சிறுமி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமியை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

இதிலிருந்து தப்பிப்பதற்காக சிறுமி தன் போனில் உள்ள “காவலன் செயலி” மூலமாக இதுகுறித்த தகவலை காவல்துறைக்கு அனுப்பிவிட்டார்.

இதுகுறித்த தகவல் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சேர்ந்துவிட்டது. இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கோபி போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் காவல்துறையினர் செல்போன் சிக்னல் மூலம் மற்றொரு காரில் சிறுமி சென்ற காரை பின் தொடர்ந்து சென்றனர்.

அதன்பின் ஒத்தக்குதிரை அருகில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சிறுமியை பாதுகாப்பாக மீட்டனர்.

இதுகுறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி, அண்ணாமலையின் உறவினர்களான கவுரி, பஞ்மூர்த்தி, பழனி போன்றோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவ்வாறு “காவலன் செயலி (ஆப்) மூலம் கிடைத்த தகவலை வைத்து 20 நிமிடத்திற்குள் காரில் கடத்தப்பட்ட அந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories