காரில் கடத்திய ஐவர்! காவலன் ஆப்பால் ஆப்பு வைத்த சிறுமி!

kidnap
kidnap

மில்லில் வேலை பார்த்த சிறுமியை காரில் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக அந்த சிறுமி தனது தாய் மற்றும் 70 வயது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

அதன்பின் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசூரில் ஒரு தனியார் மில்லில் சிறுமி தொழிலாளியாக வேலையில் சேர்ந்துள்ளார்.

ஆனால் கொரானா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூரை சேர்ந்த அண்ணாமலைக்கும் திருமணம் நடைபெற்றது.

இது குழந்தை திருமணம் என்பதால் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் அந்த சிறுமியை மீட்டு பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இந்நிலையில் பாதுகாப்பு மையத்தில் இருந்த அந்த சிறுமியை அவருடைய பாட்டி கடந்த மாதம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த சிறுமி மீண்டும் அரசூரில் தான் பணிபுரிந்த மில்லில் சேர்ந்து விட்டார்.

அங்கு சிறுமி வேலை செய்து வந்த நிலையில் மில்லுக்கு அவரின் பாட்டி காரில் சென்றுள்ளார். அதன்பின் தன்னுடன் சிறுமியை அனுப்பிவைக்குமாறு பாட்டி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மில் நிர்வாகத்தினரும் சிறுமியை பாட்டியுடன் அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமியின் பாட்டியுடன் சேர்ந்து அண்ணாமலை மற்றும் அவருடைய உறவினர்களான கவுரி, பஞ்சமூர்த்தி, பழனி ஆகியோரும் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுடன் காரில் செல்வதற்கு சிறுமி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமியை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

இதிலிருந்து தப்பிப்பதற்காக சிறுமி தன் போனில் உள்ள “காவலன் செயலி” மூலமாக இதுகுறித்த தகவலை காவல்துறைக்கு அனுப்பிவிட்டார்.

இதுகுறித்த தகவல் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சேர்ந்துவிட்டது. இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கோபி போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் காவல்துறையினர் செல்போன் சிக்னல் மூலம் மற்றொரு காரில் சிறுமி சென்ற காரை பின் தொடர்ந்து சென்றனர்.

அதன்பின் ஒத்தக்குதிரை அருகில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சிறுமியை பாதுகாப்பாக மீட்டனர்.

இதுகுறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி, அண்ணாமலையின் உறவினர்களான கவுரி, பஞ்மூர்த்தி, பழனி போன்றோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இவ்வாறு “காவலன் செயலி (ஆப்) மூலம் கிடைத்த தகவலை வைத்து 20 நிமிடத்திற்குள் காரில் கடத்தப்பட்ட அந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories