December 5, 2025, 9:45 PM
26.6 C
Chennai

ஐபிஎல்: சொதப்பல் பஞ்சாப்!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 32ஆவது ஆட்டம் – ராஜஸ்தான் vs பஞ்சாப்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முதல் பந்திலிருந்து கடைசி பந்து வரை இரு அணிகளும் போராடிய ஆட்டம். முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஒரு ஓவருக்கு 9.25 ரன் வீதம் அடித்து மொத்தம் 185 ரன்கள் அடித்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. 16.3 ஓவர்கள் நிலையில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 166 ரன்.

அதன் பின்னர் மூன்று ஓவர் மூன்று பந்துகளில் அதாவது 21 பந்துகளில் மீதமுள்ள ஐந்து விக்கட்டுகளை இழந்து 19 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

பஞ்சாப் அணியின் அர்ஷதீப் சிங் ஐந்து விக்கட்டுகள் எடுத்தார். முகம்மது ஷமி மூன்று விக்கட்டுகள் எடுத்தார். பஞ்சாப் அணியில் கிரிஸ் கெயில் விளையாடவில்லை. அவருக்கு அவரது 42ஆவது பிறந்த நாளில் ஓய்வு கொடுத்துவிட்டார்கள்.

தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுலும் (49) மாயங்க் அகர்வாலும் (67) நல்ல தொடக்கம் கொடுத்தார்கள். ஆனால் நல்ல நிலையில் அணியின் ஸ்கோர் இருக்கும்போது இருவரும் அவுட் ஆனார்கள். ராகுல் 11.5ஆவது ஓவரில், அகர்வால் 12.6ஆவது ஓவரில்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரனும் ஐடென் மெர்க்ராமும் சுமாராக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சங், ‘ரியான் பாராகை’ பந்து வீசச்சொன்னார்.

அவர் ஒரு ஓவரில் 16 ரன்களை அள்ளிக் கொடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் எட்டு ரன் எடுக்கவேண்டும். அப்போது பஞ்சாப் அணியினர் இதற்கு முன்னர் ஆடிய ஆட்டங்களில் சொதப்பியது போல சொதப்பினார்கள். கடைசி ஓவரில் நான்கு ரன் அடிக்க வேண்டும்.

அப்போது பூரன் 32 ரன்; மெர்க்ராம் 25 ரன். முதல் பந்து நோ ரன்; இரண்டாவது பந்தில் ஒரு ரன்; மூன்றாவது பந்தில் பூரன் அவுட்டானார். தீபக் ஹூடா அடுத்த பேட்ஸ்மென். அவரால் நான்காவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை; ஐந்தாவது பந்தில் அவர் அவுட்டானார்.

ஆறாவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. பஞ்சாப் அணி இருபது ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து தோல்வியச் சந்தித்தது.

நெவில்லி கார்டஸ் சொன்னது போல – கிரிக்கெட் என்பது போரடிக்கின்ற மற்றும் சுறுசுறுப்பான, பரபரப்பான மற்றும் தூங்கவைக்கின்ற கூறுகளின் கலவையாகும். ஒரு நெருக்கடியான தருணத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் நீங்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உங்கள் கண்களை எடுக்க முடியாது.

Cricket is a capricious blend of elements, static and dynamic, sensational and somnolent. You can never take your eyes away from a cricket match for fear of missing a crisis. – Neville Cardus

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories