புதுதில்லி: மஸரத் ஆலம் விடுதலை விவகாரத்தில் பாஜக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மஸரத் ஆலம் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில், மென்மையான கொள்கையைக் கடைபிடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தெரிவித்தது. இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியபோது… பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய விவகாரங்களை பாஜக சகித்துக் கொண்டிருக்காது. இந்த விவகாரங்களில், மென்மையான போக்கையும், பலவீனமான கொள்கையையும் கடைப்பிடிப்பதை பாஜக அனுமதிக்காது. மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விதத்தில் பாஜகவுக்கு உடன்பாடு கிடையாது. இதை பாஜக எதிர்க்கிறது. இது தவறான நடவடிக்கையாகும். இந்த விவகாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மஸரத் ஆலம் விடுதலை: பாஜக எச்சரிக்கை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

