ஜம்மு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஜம்மு-காஷ்மீர் அரசு செயல்படும் என்று பிடிபி கட்சி தெரிவித்தது. இதுதொடர்பாக ஜம்முவில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான இம்ரான் ராசா அன்சாரி கூறுகையில், “உச்ச நீதிமன்றமும், நீதிமன்றங்களும் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுடனோ, மத்திய அரசுடனோ விவாதம் நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “நீதிமன்ற உத்தரவை நாங்கள் செயல்படுத்தினோம்’ என்றார்.
கைதிகள் விடுதலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: பிடிபி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

