ஏழைகளுக்கான மின்வசதித் திட்டம் சௌபாக்யா யோஜனா: அறிவித்தார் மோடி

புதுதில்லி:

பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டை முன்னிட்டு, தில்லியில் தீனதயாள் பவன், பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் சில திட்டங்களை அறிவித்தார். அதில், அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்யா யோஜனா குறிப்பிடத்தக்கது. ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி, தொடர்பு சாதனம் பெறுவதற்கு உதவுதல் உள்ளிட்ட சில திட்டங்களும் இந்த அறிவிப்பில் அடங்கும்.

சௌபாக்யா யோசஜாவின்படி, வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படும். இதில் 60 சதம் மத்திய நிதி, 10 சதம் மாநில நிதி, 30 சதம் கடன்கள் மூலம் என்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தில் ஏழை மக்கள் ரூ. 500 செலுத்தி மின்சாரம் பெறலாம். இந்த ரூ.500 ஐயும் கூட, 10 மாத தவணையிலும் செலுத்தலாம். இதன்படி நாட்டில் மின்சாரம் இல்லாத வீடுகளே இருக்கக் கூடாது என்பது நோக்கமாகும்.

5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழுவை அமைத்து பிரதமர் உத்தரவிட்டார். இந்தக் குழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேப்ராயை குழுவின் தலைவராக நியமித்துள்ளார். இந்த ஐவர் குழுவில் சுர்ஜித பாலா, ரதின் ராய் மற்றும் அஷீமா கோயல் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாக உள்ளனர். நிதி ஆயோக் முதன்மை ஆலோசகர் ரத்தன் வாடல் குழுவின் செயலாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories