புதுதில்லி : ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அஞ்சலி தமானியா கட்சியில் இருந்து விலகுவதாக புதன் கிழமை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர், ” நான் வெளியேறுகிறேன். ஆம் ஆத்மி கட்சியின் முட்டாள்தனத்துக்குள் நான் வர விருபவில்லை. ஆம் ஆத்மியின் மோசமான செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை. என்று கூறியுள்ளார். மேலும், கட்சித் தலைவரும் முதல்வருமான கேஜ்ரிவால் குறித்து தெரிவித்த கருத்தில் நான் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவரது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தேன். ஆனால் குதிரை பேரங்களை நான் ஆதரிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சலி தமானியா ஆம் ஆத்மியில் இருந்து விலகல்
Popular Categories


