புதுதில்லி: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று தனது வலைத்தளத் தில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூவுக்கு மாநிலங்களவையில் இன்று கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். மகாத்மா காந்தி நம் நாட்டின் மகத்தான குடிமகன். அவரை இங்கிலாந்தின் ஏஜென்ட் என்று ஒரு முன்னாள் நீதிபதி கூறுவது ஏற்கத் தக்கதல்ல என்றனர். இந்தக் கருத்தை அவை முன்னவரும், மத்திய நிதியமைச்சருமான அருண்ஜெட்லி ஏற்றுக்கொண்டு பேசுகையில் இவர் போன்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் எவ்வாறு நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த முறையை நாங்கள் மாற்றம் செய்ய இருக்கிறோம் என்றார். இதையடுத்து மார்க்கண்டேய கட்ஜூவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரிட்டிஷ் ஏஜென்ட் காந்தி கருத்து: கட்ஜுவுக்கு மாநிலங்களவையில் கண்டனம்
Popular Categories


