பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்துக் குவிப்பு வழக்கில், வாத பிரதிவாதங்கள் அனைத்தும் இன்று முடிவடைந்தன. இதையடுத்து, இன்று மதியம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
Published:

