ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பு வளையத்துக்குள் இந்திய தூதரக அதிகாரிகள்: சுஷ்மா ஸ்வராஜ்

Published:

புதுதில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படுவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுப்பப் பட்ட ஒரு கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளித்தார். அப்போது…. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை உடனடியாக அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பாகிஸ்தானைத் தவிர மற்ற நாடுகளில் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. ‘ பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்குள்ள உளவு அமைப்பால் ரகசியமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். ரகசியமாக பின்தொடர்வது, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது ஆகிய செயல்களில் அந்நாட்டு உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசின் பல்வேறு நிலைகளில் கொண்டு செல்லப்பட்டும், கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அமெரிக்காவில் தூதரக அதிகாரி தேவயானி கோபரகடே அவமதிக்கப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்தது. தேவயானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று கூறிய சுஷ்மா ஸ்வரஜ், கடந்த சில ஆண்டுகளில் சால்வேனியா, ருமேனியா, அல்பேனியா, பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்பட சம்பவங்களை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img