April 27, 2025, 2:52 AM
29.6 C
Chennai

நவ.30: ஜகதீஷ் சந்திரபோஸின் பிறந்த நாள்!

ஜகதீஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் இன்று.

உலகிற்கு கல்வியறிவூட்டிய மிகப்பெரும் பல்கலைக்கழகம் பாரத தேசம். பல நூறு ஆண்டுகள் பல்வேறுபட்ட ஆட்சியாளர்களின் கீழ் அல்லல்பட்ட பாரத தேசத்தில் பல்வேறு துறைகளிலும் மிகப்புகழ்பெற்ற நிபுணர்கள் பலர் இருந்தனர். இன்றைய இளைய தலைமுறை எப்போதும் நினைவு கொள்ள வேண்டிய மனிதர்கள் இவர்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மயக்கத்தில் கிறங்கிக் கிடக்கும் இளம் தலைமுறை இப்படிப்பட்டவர்களை மறந்து திரிகிறது

தாவர இயலில் உலகப் புகழ்பெற்ற பல்கலை நிபுணர் ரேடியோ சயின்சின் மூலாதாரம் போன்றவர் ஜெகதீஸ் சந்திரபோஸ். இவர் வங்காளத்தில் 1858 நவம்பர் 30 அன்று பிறந்தார்.  தாவரங்களுக்கும் உயிர் உள்ளது  என்றும் அவையும் நம்மைப்போலவே தட்பவெப்ப நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்றும் தன் ஆய்வுகளால் உலகிற்கு அறிவித்த தாவர இயல் நிபுணர் ஜெகதீஸ் சந்திரபோஸ். இவருடைய கொள்கைகள் உலகெங்கும் வியாபித்த மகா விருட்சமாகப் பரவியது. 

கணம்தோறும் வளர்ந்து கொண்டிருக்கும் தாவரங்களின் திசுக்களை பல மடங்கு பெரிதாக்கிக் காட்டும் க்ரிஸ்மோக்ராப் என்ற கருவியை தயாரித்து உலக விஞ்ஞானிகளுக்கு பாரத தேசம் ஆன்மீகத்தில் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்திலும் முன்னேறுகிறது என்று நிரூபித்தார் ஜெகதீஸ் சந்திரபோஸ்.   ஒயர்லெஸ் சிக்னலின் பரிசோதனையிலும் அற்புத முன்னேற்றத்தை சாதித்து   ரேடியோ சிக்னல்களை அடையாளம் காண்பதற்கு முதல்முறையாக அதனை பயன்படுத்தி ரேடியோ முன்னோடியாகப் புகழ் பெற்றார். ராடார் இயந்திர தொடர் எந்திரத்தின் பணி முறையை மேம்படுத்தி பல புதிய அம்சங்களை வெளியிட்டு உலகத்திற்கு அளித்து தன் பன்முகத் திறமையை நிரூபித்தார் போஸ்.

நவீன கருவிகள் அவ்வளவாக கிடைக்காத அந்த காலத்திலேயே தன் சம்பளம் முழுவதையும் அதற்காக செலவிட்டு தானே சொந்தமாக ஆய்வுசாலையை கட்டி அதற்கு தேவையான கருவிகளையும் சேர்த்து எதிர்மறைச சூழலையும் தனக்கு அனுகூலமமாக மாற்றிக்கொண்டு சாதித்த ஆதர்ச விஞ்ஞானி போஸ்.

ALSO READ:  ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்!

போஸின் பெயரால் கல்கத்தாவிலுள்ள போஸ் பரிசோதனை அமைப்பு, ராயல் சொசைட்டி ஃபெலோஷிப், இந்தியன் காங்கிரஸ் தலைமைப் பதவி போன்றவை போஸின் மிகப்புகழ்பெற்ற திறமைக்கு சிறு அறிமுகங்கள் மட்டுமே.

மாடர்ன் மகரிஷியும் தாவர இயலின் மகா விருட்சமுமான ஜெகதீஸ் சந்திரபோஸின் பிறந்தநாளான இன்று மரங்களை நட்டு வளர்த்து சுற்றுச் சூழலின் சமச்சீருக்கு பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories