IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

ind vs sa india won the series - 2026

இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் போட்டித்தொடர்

இந்தியா தொடரை வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் இடம்பெற்றிருந்தனர். பும்ரா, ஜதேஜா இடம்பெறவில்லை. இந்திய அணி முதலில் விளையாடி எட்டு விக்கட் இழப்பிற்கு 349 ரன் எடுத்தது. விராட் கோலி 135 ரன் எடுத்தார். இரண்டாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 332 ரன் எடுத்து ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.

இரண்டாவது ஆட்டம் ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் விளையாடி ஐந்து விக்கட் இழப்பிற்கு 358 ரன் எடுத்தது. விராட் கோலி 102 ரன்னும் ருதுராஜ் கெய்க்வாட் 105 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 362 ரன் எடுத்து வெற்றி பெற்றது. எய்டன் மர்க்ரம் 110 ரன், ப்ரீஸ்டேக் 68 ரன், டிவால்ட் ப்ரிவிஸ் 54 ரன், பவுமா 46 ரனூம் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷதீப் சிங் 5.4 ரன்ரேட்டிலும், ஜதேஜா 5.85 ரன்ரேட்டிலும் பந்துவீசினர். மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் ரன்களை அள்ளிக்கொடுத்தனர்.

மூன்றாவது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 6, 2025இல் நடைபெற்றது. முதலாவதாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன் எடுத்தது. க்விண்டன் டி காக் 106 ரன், பவுமா 48 ரன் எடுத்தனர். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 4/66, குல்தீப் யாதவ் 4/41 விக்கட்டுகள் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியில் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (ஆட்டமிழக்காமல் 116 ரன்), ரோஹித் ஷர்மா (75 ரன்), விராட் கோலி (ஆட்டமிழக்காமல் 65 ரன்) எடுத்தனர். இந்திய அணி 39.5 ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 271 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இந்த ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஒருநாள் ஆட்டங்களில் 20000 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று விதமான ஆட்டங்களிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் ஆனார். இவ்வாறு இந்திய அணி இந்தத் தொடரை 2-1 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிபெற்றது. தொடர் நாயகனாக விராட்கோலி அறிவிக்கப்பட்டார்.

அடுத்து டி-20 தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் ஐந்து டி-20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் ஆட்டம் கட்டாக்கில் 9ஆம் தேதியும் இரண்டாவது ஆட்டம் சண்டிகரில் 11ஆம் தேதியும் மூன்றாவது ஆட்டம் 14ஆம் தேதி தர்மசலாவிலும், நான்காவது ஆட்டம் லக்னோவில் 17ஆம் தேதியும், ஐந்தாவது ஆட்டம் அகமதாபாத்தில் 19ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (அணித் தலைவர்), திலக் வர்மா, அக்சர் படேல், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.        

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories