அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்!

Published:

புது தில்லி:

பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி டெல்லியில் உள்ள நிதியமைச்சகத்துக்கு அருண்ஜேட்லி வந்தார். பின்னர் அவர் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்துக்குக் கிளம்பிச் சென்றார்.

இன்று பிப்.1 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் அருண் ஜேட்லி

2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து அருண் ஜேட்லி கூறியவை…

அதிவேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

வறுமையை குறைப்போம் என்று எங்கள் அரசு வாக்கு கொடுத்தது. கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம்.

உலகின் 5வது வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது

மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு பொறுப்பேற்றது. மத்திய அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.5% ஆக தக்கவைத்துள்ளோம். 8% வளர்ச்சியை அடைவதில் உறுதியாக உள்ளோம்

விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது

விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது

வேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

நாட்டின் இயற்கை வளங்கள் நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன

விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது

விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவாக்கம்

விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும்

மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்

ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை

விவசாயிகள் உற்பத்தி செலவில் 1.5 மடங்கு லாபம் ஈட்ட நடவடிக்கை

விவசாயிகளின் விளை பொருட்களுக்கான விலையை 150 விழுக்காடு உயர்த்த திட்டம்

உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

பட்ஜெட் இதுவரை: இதுவரை அருண் ஜேட்லி சமர்பித்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம்

விவசாயிகள் தங்கள் செலவை விட 1.5 மடங்கு அதிகமாக பணம் ஈட்ட வகை செய்துள்ளோம்

விவசாயிகளுக்கு ”அச்சே தின்” வந்து கொண்டுள்ளது

விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்

உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது

விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்

மாநில அரசுகளுடன் இணைந்து கல்வியின் தரம் உயர்த்த நடவடிக்கை

விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது

2020ல் விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக்குவோம்

விவசாயத்துறையின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்

இந்தியாவின் நேரடி வரிவிதிப்பு முறை உலகளவில் பேசப்படுகிறது

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் 2 மடங்காக உயரும்

மேலும் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்

பிரதமரின் செளபாக்யா யோஜனா திட்டத்துக்கு ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகளில் கழிவறைகள் கட்ட உதவி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ75 கோடி கடன்

8 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு

4 கோடிகிராமப்புற வீடுகளுக்கு கட்டணம் இல்லாத மின் இணைப்பு

டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்

புகை மூட்டத்தை கட்டுப்படுத்த ஹரியாணா, பஞ்சாபில் வைக்கோலை எரிப்பதை தடுக்க நடவடிக்கை

வைக்கோலை எரிப்பதற்கு பதில் அதை கையாள நவீன கருவிகள் வழங்கப்படும்

கிராமப்புற சாலைகள் அமைக்கும் பிரதான் மந்திரி யோஜான திட்டம் மேலும் நீட்டிக்கப்படும்

மீன் வளர்ச்சித்துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு

( ஜேட்லியின் அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி மேஜையை தட்டிக் கொண்டே இருக்கிறார் )

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நிதி ஆயோக் அதிக கவனம் செலுத்தும்

விவசாய ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும்

விவசாய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்ப்படும்

விவசாய கடன் இலக்கு ரூ11 லட்சம் கோடியாக உயர்வு

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கும் விரிவாக்கம்

விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும்

மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்

ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை

முதன் முறையாக ரயில்வே பல்கலைக் கழகம் அமைக்கப்படுகிறது

குஜராத்தின் பரோடாவில் சிறப்பு ரயில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்

கல்வித்துறை கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டுக்கு இதுவரை பங்குச் சந்தைகள் ஆதரவு.. சென்செக்ஸ் உயர்வு

உரம், விவசாயத்துறை, விவசாய கருவிகள் தயாரிப்பு நிறுவன பங்குகள் விலை உயர்வு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 % முதல் 7.5% ஆக இருக்கும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது

அனைவருக்கும் மருத்துவ நல உதவிகளை நீட்டிக்க நடவடிக்கை

நாடு முழுவதும் 1.5 லட்சம் புதிய மருத்துவ நல மையங்கள் அமைக்கப்படும்

4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்

நிலத்தடி நீர் பாசன திட்டங்களுக்கு ரூ2,600 கோடி

கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ரூ14.34 லட்சம் கோடி

5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்

நாடு முழுவது 24 அரசு மருத்துவ கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்படும்

காசநோயாளிகளுக்கு மாதம் ரூ500 வழங்கப்படும்

இலவச மருத்துவ வசதி திட்டத்துக்கு ரூ1,200 கோடி

உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்

பயிர் கடன் இலக்கு ரூ11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

ஏழை குடும்பங்களுக்கு மின்வசதி வழங்க ரூ16,000 கோடி

இந்த ஆண்டில் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வைக்க நடவடிக்கை

10 கோடி குடும்பங்களுக்கு ரூ5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசு ஏற்கும்

நடுத்தர தொழில்துறை மீதான வரிகள் குறைக்கப்படும், கடனுதவிகள் விரைந்து வழங்கப்படும்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான நிதி உதவித் திட்டங்கள் அதிகரிப்பு

டி.பியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை. இதற்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

வயதான பெண்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1 மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்

ஏகலவ்யா பெயரில் பழங்குடி இன குழந்தைகளுக்கு கல்வித் திட்டம்

உணவு பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு

ஜவுளி துறைக்கு ரூ7,148 கோடி ஒதுக்கீடு

கிராமபுற சுகாதாரத்துக்கு ரூ16,713 கோடி

புதிய ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும்

பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைப்பு

முத்ரா யோஜனா கீழ் ரூ3 லட்சம் கோடி கடனுதவி

18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்

99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வளர்ச்சிக்கு ரூ. 1.5 லட்சம் கோடி

கல்வித்துறை வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி

அனைத்து ரயில்களிலும் வைபை வசதி, சிசிடிவி பொருத்தப்படும்

25,000 பேருக்கு அதிகமாக பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள்

கங்கையை தூய்மைக்க 187 திட்டங்கள்

ரயில் நிலையங்கள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்

9,000 கிலோ மீட்டருக்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

ஸ்மார்ட், அம்ருத் திட்டங்களுக்கு ரூ2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு

ரயில்வே துறைக்கு ரூ1.48 லட்சம் கோடி

பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படும்

அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி

ஹவாய் செருப்பு போட்ட எளியவரும் ஹவாய் ஜஹாசில் (விமானத்தில்) பயணிக்க வைப்போம்

4000 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்

ஜவுளித்துறைக்கு ரூ. 7148 கோடி ஒதுக்கீடு

பெங்களூருவில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img