செல்லுக்கு பதிலாக சோப்பு! பிளிப்கார்ட் பார்சலைப் பிரித்தவர் அதிர்ச்சி!

Published:

ஆன்லைனில் பணம் கட்டி, ‘ஐபோன் 8’ ஆர்டர் செய்தவருக்கு சோப்பை அனுப்பி வைத்து அதிர்ச்சி அளித்திருக்கிறது பிளிப்கார்ட்.

நவி மும்பை அருகேயுள்ள பன்வலைச் சேர்ந்தவர் தேம்ராஜ் மெகபூர் நாக்ராலி (26) சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கு லேட்டஸ்ட் மாடலான ’ஐபோன் 8’ செல்போன் வாங்க ஆசை ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்டில், ஆர்டர் செய்தார். உடனடியாக தனது கார்டில் அந்த போனுக்கான ரூ.55 ஆயிரத்தைச் செலுத்தினார்.

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு பிளிப்கார்டில் இருந்து வீட்டுக்கு வந்தது, ஒரு பார்சல். ஆசையாக பிரித்துப் பார்த்த நாகரலிக்கு அதிர்ச்சி. ஏனென்றால் உள்ளே இருந்தது, ’ஐபோன் 8’ அல்ல. ’ஆக்டிவ் வீல்’ என்ற சோப்பு. தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த நாகரலி, பிளிப்கார்ட் மீது பைகுல்லா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி பிளிப்கார்ட் நிறுவனத்திடம் கேட்டபோது, ’இதுபற்றி நாங்களும் விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img