புது தில்லி: 2012ல் குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற போதே, பிரதமர் வேட்பாளர்களில் ஒருவனாக முன்னிறுத்தப் படுவேன் என நான் நம்பினேன் என்று கூறியுள்ளார் நரேந்திர மோடி. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரிடம் ஊடக ஆலோசகராகப் பணியாற்றியவர் லான்ஸ் பிரைஸ். இவர், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். ‘மோடி விளைவு: இந்தியாவை மாற்ற நரேந்திர மோடியின் பிரசாரம்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இதில், மோடி, பியூஸ் கோயல், ஸ்மிருதி இராணி உள்ளிட்டோரிடம் பேட்டி எடுத்துள்ளார். அவர்களிடம் பேசியபோது பெற்ற தகவல்களை வைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, மோடியின் மனநிலை குறித்து பேட்டியாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மோடி, ‘தேர்தல் முடிவு வெளியான நாள் (16-5-2014) அன்று காலை, நான் டி.வி. எதுவும் பார்க்கவில்லை. ஒரு தனி அறையில் தியானம் செய்து கொண்டிருந்தேன். 12 மணிக்குப் பிறகே தொலைபேசி அழைப்புகளையும் எடுத்தேன். அவ்வாறு நான் முதலில் ஏற்றுக்கொண்ட தொலைபேசி அழைப்பு ராஜ்நாத் சிங்கிடமிருந்து வந்தது. அவர் என்னிடம் ஏற்கெனவே எதிர்பார்த்தது போல, நாம் வெற்றி பெறும் நிலையில் உள்ளோம் என்று கூறினார் என்று கூறியுள்ளார் மோடி. நீங்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுவீர்கள் என்று நினைத்தீர்களா என்று கேட்டதற்கு, கடந்த 2012–ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோதே, பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக நான் இருப்பேன் என்று நம்பினேன் என மோடி கூறியுள்ளார். எனினும் தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு கட்சியிடம் எப்போதும் நான் கேட்டுக் கொள்ளவில்லை; இந்த நிலையை அடைவேன் என ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

