February 22, 2026, 8:05 AM
26.1 C
Chennai

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது காந்திஜியின் கனவு; எனதல்ல : மாநிலங்களவையில் மோடி பேச்சு

புது தில்லி:

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை நான் சொல்லவில்லை, காந்திஜியே கனவு கண்டார் என்று பேசினார் பிரதமர் மோடி.

குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, மக்களவையில் காங்கிரஸை சாடினார். பின்னர் மாநிலங்களவையில் பேசினார். அப்போது அவர், காந்திஜியின் கனவை நனவாக்குவேன் என்றார்.

மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, மக்களவையில் எனது பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை. நான் பேசும்போது என்னைப் பேசவிடாமல் அனைவரும் அமளியில் ஈடுபட்டனர். மக்களின் நல்வாழ்வுக்காக இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசின் லட்சியம்.

காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூற எனக்கு உரிமை கிடையாது. எனினும் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை வழங்க நான் தயாராகவே இருக்கிறேன். நான் ஒன்றை எழுதினால், எதிர்க்கட்சிகள் அதனை மாற்றி வேறு ஒன்றைப் படிக்கின்றன. மக்கள் நலனுக்காக எதிர்க் கட்சிகள் சிறந்த ஆலோசனைகள் கூறினால் அதனை ஏற்க நான் தயார். என்னையும், எங்களையும் திட்டுவதாக நினைத்துக் கொண்டு, நீங்கள் நாட்டைத் தான் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களைப் போன்ற சாமானியர்கள் ஆட்சியில் இருப்பதை சிலர் விரும்பவில்லை.

விமர்சனம் செய்வது ஜனநாயகத்தின் கடமை. பாஜக.,வை விமர்சிக்கலாம். ஆனால், நாட்டை விமர்சிக்க உரிமை இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது எனது கருத்தல்ல. மகாத்மா காந்தியின் கருத்து.

மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய வேண்டும் என்பதே பாஜக.,வின் நோக்கம். அதற்காக மக்கள் நலன் திட்டங்களில் எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கேட்கத் தயார். மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இன்னும் ஏராளமானவை செயல்படுத்த வேண்டியுள்ளது

போபால் விஷவாயுக் கசிவு குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடியது போன்ற நிலையைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் வாஜ்பாய் பெயரை பயன்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பேசிய மோடி, புதிய இந்தியாவுக்கு எதிராக காங்கிரஸ் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories