பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் படாததைக் கண்டித்து ஆந்திராவில் முழு வேலைநிறுத்தம்

ஹைதராபாத்:  மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்காததை கண்டித்து  ஆந்திராவில் பந்த் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் உள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி அடைந்தது,. தங்கள் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கப் படாத கோபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்தார்.பின்னர் மாநில நலன் கருதி தனது முடிவை மாற்றிக் கொண்டார் .

இந்தச் சூழ்நிலையில் நேற்று தனது கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான பிரச்னையை தெருவில் வைத்து தீர்க்க முடியாது நாடாளுமன்றத்தில் தான் தீர்வு காண வேண்டும். எனவே நாடாளுமன்றத்தில்  ஆந்திராவிற்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது தொடர்பான சட்டம் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து 2 மணி நேரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்நிலையில் பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் கண்டித்து ஓய்.எஸ்.ஆர். காங்., சி.பி.ஐ. ,சி.பி.எம். உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பஸ்கள் தமிழக எல்லைப் பகுதியான திருத்தணி, மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, ஆந்திர மாநிலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் லாபம் கருதி, தீர்க்கமான தெளிவான நோக்கம் இன்றி, அவசர கதியில் பிரிக்கப்பட்டதாகவும், அதனால் பல்வேறு சிக்கல்களை இந்த அரசு சந்தித்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகக் கூறினார். மேலும் காங்கிரஸ் தீர்க்கமற்ற பார்வையையும் சாடினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories