ஐதராபாத்-சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை எம்.எல்.ஏ. மகன் உள்பட 6 பேர் கைது..

ஐதராபாத்தில் சொகுசு காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எம்.எல்.ஏ. மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

719105 hyderabad teen gang raped 1 - 2026

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் கடந்த 28-ம் தேதி மாலை 4 மணி அளவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 17 வயது சிறுமி விடு திரும்பியுள்ளார். விடுதியில் இருந்து வெளியே வந்த அந்த சிறுமியை வீட்டில் விட்டுவிடுவதாக கூறி சிறுவர்கள் உள்பட 6 பேர் சிவப்பு நிற ‘பென்ஸ்’ சொகுசு காரில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அந்த 6 பேரும் அந்த சிறுமியை பஞ்சாரா கில்ஸ் பகுதியில் உள்ள பேக்கரிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அந்த 6 பேரும் சிறுமியை பென்ஸ் சொகுசு காரில் இருந்து மாற்றி இன்னோவா காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை அந்த 6 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரில் 5 பேர் சிறுவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் மகன்களுக்கு தொடர்பு உள்ளதாக பாஜக குற்றச்சாட்டி இருந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்த வழக்கில் சதுதீன் மாலிக், மற்றும் சிறுவர்கள் என 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முக்கிய நபரின் மகனும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 6-வது நபராக எம்.எல்.ஏ. மகனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி எம்.எல்.ஏ. மகனை போலீசார் தற்போது கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மகன் சிறுவன் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி சொகுசு காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories