பாட்னா: எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று, பீகார் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டவருமான நரேந்திர சிங் புகார் கூறியுள்ளார். மேலும் அவர் மாஞ்சி அரசுக்கு 140 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்தார். முன்னதாக, மாஞ்சி அமைச்சரவையில் இருந்து விலகுமாறு கட்சி இட்ட கட்டளையை இவர் மறுத்திருந்தார். மாஞ்சி அமைச்சரவையில் நீடித்த நிலையில், கட்சிக்கு சீரழிவு ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டில், கட்சித் தலைவர் சரத் யாதவ், இவர் உள்ளிட்ட 7 அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

