திருமலை: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறீசேன, இன்று காலை திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிறீசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. திருப்பதி தரிசனம் முடித்த பின்னர் அவர் சிறப்பு விமானத்தில் இலங்கை திரும்பினார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன 4 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர், மனைவி உட்பட 24 பேர் குழுவுடன் பீகார் மாநிலம் புத்த கயாவுக்குச் சென்றார். அங்கே மகாபோதி ஆலயத்தில் புத்தருக்கு ஞானம் கிடைத்த போதி மரத்தின் கீழ் நின்றவாறு சுமார் 15 நிமிடம் பிரார்த்தனை செய்தார். மகாபோதி ஆலயத்தில் 1 மணி நேரமாக பல்வேறு பிரார்த்தனைகளை மேற்கொண்ட அவர், பின்னர் அருகில் உள்ள இலங்கை மடத்துக்குச் சென்றார். அங்கு மகாபோதி கோயில் நிர்வாகம் சார்பாக அவருக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
திருப்பதி வந்த இலங்கை அதிபர் சிறீசேன கோயிலில் சுவாமி தரிசனம்
Published:

