ஆன்லைன் விளையாட்டில் பட்ட கடனை அடைக்க நகை கடையில் கொள்ளையடித்த நபர்..

image 1 - 2026

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நபர், கடனை அடைக்க நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

டெல்லி ஷாலிமார் பாக்கில் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த நபர் ரின்கு ஜிண்டால் ( 36). இவர், 2019-ம் ஆண்டு மார்ச்சில் பிரசாந்த் விகார் பகுதியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின் அதே ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார். ஜிண்டாலுக்கு வருவாய் எதுவும் இல்லாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போனார். அதற்கு அடிமையான அவர், பணம் தேவை என்பதற்காக பழைய தொழிலுக்கு திரும்பியுள்ளார்.

இதன்படி, கைக்குட்டையால் முகமூடி போன்று அணிந்து கொண்டு, நகை கடை ஒன்றிற்குள் புகுந்து உள்ளார். கடை உரிமையாளர், பணியாளர்கள் அனைவரும் கடையில் இருந்தபோது, துப்பாக்கி முனையில் 10 தங்கி சங்கிலிகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, தப்பியோடி விட்டார்.

இதுபற்றி உரிமையாளர் அனுராக் கார் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ பகுதிக்கு வந்த போலீசாருக்கு சி.சி.டி.வி. காட்சிகளே கைகொடுத்துள்ளது. அவரது இடது கையில் பிளாஸ்டிக் பை ஒன்றும், வலது கையில் துப்பாக்கியும் இருந்துள்ளது. எனினும், ரிக்சாவில் ஏறி போனவர் போக்குவரத்து நெரிசலில் அடையாளம் காணமுடியாத சூழலில் தப்பி சென்றார்.

பின்னர் உளவு தகவல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஒரு வார காலம் தொடர் முயற்சியின் பயனாக, கடந்த 25-ந்தேதி அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டன. 76 கிராம் கொண்ட ஒரு செயினை அடகுக்கு வைத்து, ரூ.2.6 லட்சம் பெற்றுள்ளார். அவற்றில் ரூ.1.5 லட்சம் தொகையை ஆன்லைன் விளையாட்டில் இழந்து விட்டார்.

இதுபோக, மீதமுள்ள தொகையை போலீசார் கைப்பற்றினர். சம்பவத்தன்று ஜிண்டால் அணிந்திருந்த ஆடைகள், காலணிகள் மற்றும் பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை சோதனையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories