ஆன்லைன் விளையாட்டில் பட்ட கடனை அடைக்க நகை கடையில் கொள்ளையடித்த நபர்..

image 1 - 2026

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நபர், கடனை அடைக்க நகை கடையில் பொம்மை துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

டெல்லி ஷாலிமார் பாக்கில் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த நபர் ரின்கு ஜிண்டால் ( 36). இவர், 2019-ம் ஆண்டு மார்ச்சில் பிரசாந்த் விகார் பகுதியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின் அதே ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டார். ஜிண்டாலுக்கு வருவாய் எதுவும் இல்லாத நிலையில், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போனார். அதற்கு அடிமையான அவர், பணம் தேவை என்பதற்காக பழைய தொழிலுக்கு திரும்பியுள்ளார்.

இதன்படி, கைக்குட்டையால் முகமூடி போன்று அணிந்து கொண்டு, நகை கடை ஒன்றிற்குள் புகுந்து உள்ளார். கடை உரிமையாளர், பணியாளர்கள் அனைவரும் கடையில் இருந்தபோது, துப்பாக்கி முனையில் 10 தங்கி சங்கிலிகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, தப்பியோடி விட்டார்.

இதுபற்றி உரிமையாளர் அனுராக் கார் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ பகுதிக்கு வந்த போலீசாருக்கு சி.சி.டி.வி. காட்சிகளே கைகொடுத்துள்ளது. அவரது இடது கையில் பிளாஸ்டிக் பை ஒன்றும், வலது கையில் துப்பாக்கியும் இருந்துள்ளது. எனினும், ரிக்சாவில் ஏறி போனவர் போக்குவரத்து நெரிசலில் அடையாளம் காணமுடியாத சூழலில் தப்பி சென்றார்.

பின்னர் உளவு தகவல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஒரு வார காலம் தொடர் முயற்சியின் பயனாக, கடந்த 25-ந்தேதி அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டன. 76 கிராம் கொண்ட ஒரு செயினை அடகுக்கு வைத்து, ரூ.2.6 லட்சம் பெற்றுள்ளார். அவற்றில் ரூ.1.5 லட்சம் தொகையை ஆன்லைன் விளையாட்டில் இழந்து விட்டார்.

இதுபோக, மீதமுள்ள தொகையை போலீசார் கைப்பற்றினர். சம்பவத்தன்று ஜிண்டால் அணிந்திருந்த ஆடைகள், காலணிகள் மற்றும் பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை சோதனையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories