பெட்ரோலியத் துறை ஆவணங்களை கசிய விட்டதாக துறை அலுவலர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது

dharmendra-pradhan
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புது தில்லி: தனியார் நிறுவனங்களுக்கு பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்களைக் கசிய விட்டதாக அந்தத் துறையின் அலுவலர்கள் இருவர் உள்பட 5 பேரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். மத்திய பட்ஜெட் மாதக் கடைசி நாளான பிப்.28ல் தாக்கலாகவுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் பட்ஜெட் தயாரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறையின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தனியார் நிறுவனங்கள், பெட்ரோலியத் துறையிலுள்ள சில அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து முக்கிய ஆவணங்களைப் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலியத் துறையில் பணியாற்றும் எழுத்தர், உதவி அலுவலர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி மாநகர காவல் ஆணையர் பாஸி, ஆவணங்கள் பிரதி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கும் தனியார் ஆலோசகர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக டில்லியில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தச் சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில், இது போன்று ஆவணங்கள் கசிவது சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. ஆனால் தற்போது கடுமையான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றார். கைது செய்யப்பட்டவர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைச் சேர்ந்த நபர் ஒருவரும் அடங்குவார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories